December 7, 2025, 8:30 PM
26.2 C
Chennai

மகரவிளக்கு பூஜை நிறைவு சபரிமலை இன்று காலை நடை அடைப்பு..

FB IMG 1674179807166 - 2025
இன்று பந்தளம் புறப்பட்டு
சென்ற திருபாவரணங்கள்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காலம் நிறைவடைந்தத நிலையில் இன்று காலை பந்தள மன்னர் ராஜராஜ வர்மா ஐயப்பனை தரிசனம் செய்ய கோயில் நடை அடைக்கப்பட்டு சாவியை மேல்சாந்தி மன்னரிடம் முறைப்படி வழங்க‌ மன்னர் சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாசி மாத பூஜைகள் நடத்த சாவியை மீண்டும் கோயில் நிர்வாகத்திடம் வழங்கி திருபாவரணங்களுடன் பந்தளத்திற்கு நடைபயண யாத்திரையாக புறப்பட்டு சென்றார்.

சபரிமலை ஐயப்பன் கோயில் ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்பட்டதையடுத்து சபரிமலையில் பக்தர்கள் தரிசனம் நிறைவடைந்தது.மண்டல, மகர விளக்கு பூஜைக்காலத்தில் சுமார் 45 லட்சம் பக்தர்கள் சபரிமலையில் தரிசனம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் சபரிமலை காணிக்கையை எண்ணுவதில் குறைபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது ஆய்வு செய்ய கேரள உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அளிக்கப்படும் காணிக்கை தொகையை எண்ணுவதில் குறைபாடு உள்ளதா என ஆய்வு செய்ய திருவிதாங்கூா் தேவஸம் வாரியத்தின் லஞ்ச ஒழிப்புப் பிரிவுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் காணிக்கை தொகையை எண்ணுவதற்கு நீண்ட நாள்களாவதால் ரூபாய் நோட்டுகள் பழையதாகி பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது என்று பத்திரிகைகளில் வந்த செய்திகளின் அடிப்படையில் கேரள உயா்நீதிமன்றம் அறிக்கை தாக்கல் செய்ய சபரிமலை சிறப்பு ஆணையருக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் அனில் கே.நரேந்திரன், பி.ஜி.அஜித் குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது சபரிமலை சிறப்பு ஆணையா் தாக்கல் செய்த அறிக்கையில், சபரிமலையில் உள்ள பல்வேறு உண்டியல்களில் ஏராளமான சில்லறை மற்றும் ரூபாய் நோட்டுகளை பக்தா்கள் காணிக்கையாக அளிக்கிறாா்கள். அந்தக் காணிக்கைகள் புதிய, பழைய கருவூலங்களில் வைத்து எண்ணப்படுகிறது.

மகரவிளக்கு பூஜை முடிந்து ஜனவரி 20-ஆம் தேதி கோயில் மூடப்பட்ட பிறகும் இந்த எண்ணிக்கை பணி முடிவடைவதில்லை. இடப்பற்றாக்குறை காரணமாக சில்லறை எண்ணும் பணி அன்னதான மண்டபத்திலும் நடைபெறுகிறது. தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்து மற்றொரு அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று குறிப்பிட்டிருந்தாா்.

இதையடுத்து, காணிக்கை தொகை எண்ணப்படுவதில் குறைபாடு உள்ளதா என திருவிதாங்கூா் தேவஸம் வாரியத்தின் லஞ்ச ஒழிப்புப் பிரிவு ஆய்வு செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories