மதுரை இந்து மக்கள் கட்சி பிரமுகர் கொலை: போலீஸ் ஏட்டு உள்பட 8 பேரை பிடித்து விசாரணை..

madurai - 2026

மதுரை இந்து மக்கள் கட்சி பிரமுகர் செவ்வாய் கிழமை இரவு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் போலீசார் போலீஸ் ஏட்டு உள்பட 8 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.ஜெய்ஹிந்துபுரம் போலீஸ் நிலைய ஏட்டு ஹரிகரபாபுவுடன் பழகிய மணிகண்டன், அவரது வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்திருக்கிறார். மனைவியுடன் மணிகண்டன் தொடர்பு வைத்திருப்பதாக ஹரிகரபாபுவுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம்‌என மதுரை போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் மணிகண்டன் (48). இந்து மக்கள் கட்சியின் மதுரை தெற்கு மாவட்ட துணை செயலாளராக இருந்து வரும் இவர், மதுரை ஜெய்ஹிந்த்புரம் சோலையழகுபுரத்தில் நகை கடை நடத்தி வந்தார்.

செவ்வாய் கிழமை இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்ற மணிகண்டனை, சிறிது தூரத்தில் 5-க்கும் மேற்பட்டோர் அடங்கிய முகமூடி அணிந்த ஒரு கும்பல் வழிமறித்து, தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிய அவர்கள் அனைவரும் கண்ணிமைக்கும் நேரத்தில் சம்பவ இடத்திலிருந்து மோட்டார் சைக்கிள்களில் தப்பி சென்று விட்டனர்.

பலத்த வெட்டுக்காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த மணிகண்டனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இந்து மக்கள் கட்சி நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து மதுரையில் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக தகவலறிந்த போலீஸ் உதவி கமிஷனர் சண்முகம், ஜெய்ஹிந்த்புரம் இன்ஸ்பெக்டர் கதிர்வேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

மணிகண்டனை கொன்றவர்கள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்பது குறித்து துப்பு துலக்க இன்று அதிகாலை 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும் அந்த பகுதியில் பலரிடம் விசாரணை நடத்தினர். அதில் மணிகண்டனை கொன்ற கொலையாளிகள் சிலர் அடையாளம் காணப்பட்டனர்.

அவர்களை தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில் 8 பேர் சிக்கினர். மதுரை ஜெய்ஹிந்து புரம் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வரும் ஏட்டு ஹரிகரபாபு, ஜெய்ஹிந்துபுரத்தை சேர்ந்த அஜித்குமார் (25), பாரதியார் ரோடு நேதாஜி நகர் அய்யப்பன் (26), தேவர் நகர் முதல் தெரு கார்த்திக்(26), தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அடைக்கலபுரத்தை சேர்ந்த தினேஷ் (27), பாண்டி உள்ளிட்ட 8 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கொலையுண்ட மணிகண்டன் அந்த பகுதியில் நகைக்கடை மற்றும் பழைய நகைகளை அடகு பிடிக்கும் தொழில் செய்து வந்தார். அப்போது அவர் பழைய நகைகளை குறைந்த விலைக்கு வாங்கி பலரிடம் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. மேலும் ஜெய்ஹிந்துபுரம் போலீஸ் நிலைய ஏட்டு ஹரிகரபாபுவுடன் பழகிய மணிகண்டன், அவரது வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்திருக்கிறார்.

அப்போது அவரது மனைவியுடன் மணிகண்டன் தொடர்பு வைத்திருப்பதாக ஹரிகரபாபுவுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கும், மணிகண்டனுக்கும் இடையே அடிக்கடி மோதல் நடந்து வந்ததும் தெரியவந்தது. இந்த நிலையில் தான், செவ்வாய் கிழமை இரவு மணிகண்டன் கொலை செய்யப்பட்டுள்ளார்.

எனவே கள்ளத்தொடர்பு விவகாரத்தில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு வலுத்துள்ளது. அதே வேளையில் பழைய நகைகளை அடகு பிடிப்பதில் ஏற்பட்ட முன்விரோதத்தில் மணிகண்டன் கொல்லப்பட்டாரா? அரசியல் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொலை செய்யப்பட்ட மணிகண்டனுக்கு லட்சுமி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories