அடுத்தடுத்து நிகழ்வில் பவானி ஆற்றில் மூழ்கி 3 பெண்கள் மூன்று மாணவர்கள் பலி..?..

images 66 1 - 2026

பவானி ஆற்றில் மூழ்கி 3 பெண்கள் பலி சிறுமுகையில் பவானி ஆற்றில் மூழ்கி 3 பெண்கள் பலியானார்கள்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் சிறுமுகையில் பவானி ஆற்றில் மூழ்கி 3 பெண்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(64). இவரது உறவினர் சிறுமுகையில் புதிய வீடு வாங்கியுள்ளார். இதன் கிரகப்பிரவேசம் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்தது. இதில் கலந்து கொள்வதற்காக உறவினர்கள் பாக்கியம், அவருடைய மருமகள் ஜமுனா (40), கஸ்தூரி, சகுந்தலா (50) ஆகியோர் நேற்று சிறுமுகையில் உள்ள பாலகிருஷ்ணன் வீட்டுக்கு வந்திருந்தனர். அவர்கள் மாலை 4 மணிக்கு சிறுமுகை அருகே உள்ள வச்சினம்பாளையம் பம்ப் ஹவுஸ் அருகே உள்ள பவானி ஆற்றுக்கு குளிக்க சென்றனர்.

அவர்களுடன், பாலகிருஷ்ணனும் வந்திருந்தார். பாக்கியம் உள்பட 4 பேரும் தண்ணீரில் இறங்கி குளித்தனர். பாலகிருஷ்ணன் கரையில் நிறுத்தி வைத்திருந்த தனது காரில் அமர்ந்திருந்தார். 3 பேர் பலி அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற 4 பேரும் திடீரென தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். அவர்களது கூக்குரல் கேட்டு கரையில் இருந்து ஓடி வந்த பாலகிருஷ்ணன் ஆற்றில் குதித்து 4 பேரையும் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டார். எனினும் ஆற்றில் மூழ்கி பாக்கியம், ஜமுனா ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆற்று வெள்ளத்தில் சகுந்தலா அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தார்.

images 65 - 2026

இதற்கிடையில் அக்கம்பக்கத்தினர் கஸ்தூரியை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடலை தேடும் பணி இதையடுத்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் பாக்கியம், ஜமுனா ஆகியோரது உடல்களை மீட்டனர். சகுந்தலாவின் உடலை தேடும் பணியை தீயணைப்பு துறையினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

3 பெண்கள் பலியானது குறித்து சிறுமுகை போலீஸ் இன்ஸ்பெக்டர் வேளாங்கண்ணி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். உறவினர் வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு வந்த 3 பெண்கள் பவானி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதே போன்று மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி ஊராட்சி உப்பு பள்ளம் பவானி ஆற்றில் நேற்று மாலை 3.30 மணியளவில் கோவையை சேர்ந்த 6 பள்ளி மாணவர்கள் குளித்து கொண்டு இருந்தனர். அப்போது திடீரென ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. உடனே 4 மாணவர்கள் நீந்தி கரைக்கு வந்துவிட்டனர்.

மற்ற 2 பேர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர். இதை கண்ட சக மாணவர்கள் கூச்சல் போட்டனர். மேலும் மேட்டுப்பாளையம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள், ஆற்றில் இறங்கி 2 மாணவர்களையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். இருள் சூழ தொடங்கியதால், தேடும் பணி கைவிடப்பட்டது. இதனால் 2 மாணவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை. போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள், உப்பிலிபாளையம் பகுதியை சேர்ந்த கவுதம்(வயது 16) என்பதும், மற்றொருவர் சிங்காநல்லூரை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இன்று ஞாயிற்றுக்கிழமை காலையில் தேடும் பணி மீண்டும் துவங்கியது என்று போலீசார் தெரிவித்தனர். இதனால் உறவினர்கள், சக மாணவர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

ஆழியாறு தடுப்பணையில் மூழ்கி பிளஸ்-2 மாணவர் பலி..

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஆழியாறு அணை உள்ளது. இந்த அணையின் கீழ் பகுதியில் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு இருக்கிறது. இங்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் பொதுப்பணித்துறை மற்றும் போலீசார் சார்பில் எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்தநிலையில் ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பயிலும் 170 மாணவர்கள் ஆழியாறுக்கு சுற்றுலா வந்தனர். அவர்கள் தடுப்பணையில் இறங்கி குளித்தனர். அதில், பிளஸ்-2 மாணவரான நடராஜன் என்பவரது மகன் லோகசுதன்( 17), புதை மணலுடன் கூடிய ஆழமான பகுதிக்கு சென்று

தண்ணீரில் மூழ்கி தத்தளித்து
பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து ஆழியாறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சுற்றுலா வந்த இடத்தில், தடுப்பணையில் மூழ்கி பள்ளி மாணவர் உயிரிழந்தது, சக மாணவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories