அடுத்தடுத்து நிகழ்வில் பவானி ஆற்றில் மூழ்கி 3 பெண்கள் மூன்று மாணவர்கள் பலி..?..

images 66 1 - 2026

பவானி ஆற்றில் மூழ்கி 3 பெண்கள் பலி சிறுமுகையில் பவானி ஆற்றில் மூழ்கி 3 பெண்கள் பலியானார்கள்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் சிறுமுகையில் பவானி ஆற்றில் மூழ்கி 3 பெண்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(64). இவரது உறவினர் சிறுமுகையில் புதிய வீடு வாங்கியுள்ளார். இதன் கிரகப்பிரவேசம் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்தது. இதில் கலந்து கொள்வதற்காக உறவினர்கள் பாக்கியம், அவருடைய மருமகள் ஜமுனா (40), கஸ்தூரி, சகுந்தலா (50) ஆகியோர் நேற்று சிறுமுகையில் உள்ள பாலகிருஷ்ணன் வீட்டுக்கு வந்திருந்தனர். அவர்கள் மாலை 4 மணிக்கு சிறுமுகை அருகே உள்ள வச்சினம்பாளையம் பம்ப் ஹவுஸ் அருகே உள்ள பவானி ஆற்றுக்கு குளிக்க சென்றனர்.

அவர்களுடன், பாலகிருஷ்ணனும் வந்திருந்தார். பாக்கியம் உள்பட 4 பேரும் தண்ணீரில் இறங்கி குளித்தனர். பாலகிருஷ்ணன் கரையில் நிறுத்தி வைத்திருந்த தனது காரில் அமர்ந்திருந்தார். 3 பேர் பலி அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற 4 பேரும் திடீரென தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். அவர்களது கூக்குரல் கேட்டு கரையில் இருந்து ஓடி வந்த பாலகிருஷ்ணன் ஆற்றில் குதித்து 4 பேரையும் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டார். எனினும் ஆற்றில் மூழ்கி பாக்கியம், ஜமுனா ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆற்று வெள்ளத்தில் சகுந்தலா அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தார்.

images 65 - 2026

இதற்கிடையில் அக்கம்பக்கத்தினர் கஸ்தூரியை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடலை தேடும் பணி இதையடுத்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் பாக்கியம், ஜமுனா ஆகியோரது உடல்களை மீட்டனர். சகுந்தலாவின் உடலை தேடும் பணியை தீயணைப்பு துறையினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

ALSO READ:  திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை - வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது...

3 பெண்கள் பலியானது குறித்து சிறுமுகை போலீஸ் இன்ஸ்பெக்டர் வேளாங்கண்ணி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். உறவினர் வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு வந்த 3 பெண்கள் பவானி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதே போன்று மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி ஊராட்சி உப்பு பள்ளம் பவானி ஆற்றில் நேற்று மாலை 3.30 மணியளவில் கோவையை சேர்ந்த 6 பள்ளி மாணவர்கள் குளித்து கொண்டு இருந்தனர். அப்போது திடீரென ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. உடனே 4 மாணவர்கள் நீந்தி கரைக்கு வந்துவிட்டனர்.

மற்ற 2 பேர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர். இதை கண்ட சக மாணவர்கள் கூச்சல் போட்டனர். மேலும் மேட்டுப்பாளையம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள், ஆற்றில் இறங்கி 2 மாணவர்களையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். இருள் சூழ தொடங்கியதால், தேடும் பணி கைவிடப்பட்டது. இதனால் 2 மாணவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை. போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள், உப்பிலிபாளையம் பகுதியை சேர்ந்த கவுதம்(வயது 16) என்பதும், மற்றொருவர் சிங்காநல்லூரை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இன்று ஞாயிற்றுக்கிழமை காலையில் தேடும் பணி மீண்டும் துவங்கியது என்று போலீசார் தெரிவித்தனர். இதனால் உறவினர்கள், சக மாணவர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

ALSO READ:  முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

ஆழியாறு தடுப்பணையில் மூழ்கி பிளஸ்-2 மாணவர் பலி..

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஆழியாறு அணை உள்ளது. இந்த அணையின் கீழ் பகுதியில் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு இருக்கிறது. இங்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் பொதுப்பணித்துறை மற்றும் போலீசார் சார்பில் எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்தநிலையில் ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பயிலும் 170 மாணவர்கள் ஆழியாறுக்கு சுற்றுலா வந்தனர். அவர்கள் தடுப்பணையில் இறங்கி குளித்தனர். அதில், பிளஸ்-2 மாணவரான நடராஜன் என்பவரது மகன் லோகசுதன்( 17), புதை மணலுடன் கூடிய ஆழமான பகுதிக்கு சென்று

தண்ணீரில் மூழ்கி தத்தளித்து
பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து ஆழியாறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சுற்றுலா வந்த இடத்தில், தடுப்பணையில் மூழ்கி பள்ளி மாணவர் உயிரிழந்தது, சக மாணவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ:  நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

Entertainment News

Popular Categories