பக்தர்கள் மீது தாக்குதல்; சங்கரன்கோயில் டிஎஸ்பி.,க்கு இந்து முன்னணி கண்டனம்!

hindumunnani - 2026

சங்கரன்கோவிலில் பக்தர்கள் மீது போலீஸ் தாக்குதல் நடத்தியதற்கு இந்துமுன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின்- மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது….

சங்கரன்கோவிலில் கோவிலுக்குள் சாமி கும்பிட்டு திரும்பிய பக்தர்கள் உட்பட இந்து முன்னணி நிர்வாகிகள் மீது கொடூர தாக்குதல் நடத்தி நூற்றுக்கணக்கான பக்தர்களை கைது செய்ய செய்த புளியங்குடி டிஎஸ்பி அசோக் உள்ளிட்ட தென்காசி மாவட்ட காவல்துறையினரின் செயல் மிகுந்த கண்டனத்திற்குரியது.

தனது மனைவியுடன் சாமி கும்பிட்டு வெளியே வந்த இந்துமுன்னணி மாநில இணை அமைப்பாளர் K.K.பொன்னையா மீது புளியங்குடி டிஎஸ்பி அசோக் கொடூர தாக்குதல் நடத்தியுள்ளார். தாக்குதலில் பலத்த காயமுற்ற திரு K.K.பொன்னையா அவர்கள் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோவிலில் இருந்து வெளியே வந்து காவல்துறை தாக்குதலில் படுகாயம் அடைந்த சங்கரன்கோவிலை சார்ந்த பாடகலிங்கம் என்ற பக்தர் கொடுங்காயம் அடைந்ததால் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை செய்யப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளார்

தென்காசி மாவட்ட காவல்துறை மற்றும் டிஎஸ்பி அசோக் திக மற்றும் திமுகவின் கைப்பாவையாக செயல்படுவதை காட்டுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்காசி மாவட்டம் சேர்ந்தமரத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவிலும் புளியங்குடி டிஎஸ்பி அசோக் இதே போல் பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார் இந்து கோவில் விழாக்களின் போது இந்துக்கள் மீது தாக்குதல் நடத்துவதை டிஎஸ்பி அசோக் வாடிக்கையாக வைத்துள்ளார் இது மிகுந்த கண்டனத்துக்குரியதாகும்

கடவுள் மறுப்பாளர் வீரமணி பொதுக்கூட்டத்தை கோமதியம்மன் கோவில் அருகில் நடத்துவதற்காக கோவிலில் இருந்து வெளியே வந்தவர்களை எல்லாம் அடித்து காயப்படுத்திய காவல்துறையின் அராஜக செயலை கண்டித்தும் தொடர்ந்து இந்துக்கள் மீது அராஜகமாக தாக்குதல் நடத்தி வரும் டிஎஸ்பி அசோக் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்துமுன்னணி மாபெரும் ஆர்ப்பாட்டத்தை வரும் 28.2.23 அன்று நடத்தவிருக்கிறது.

திட்டமிட்ட ரீதியில் கடவுள் மறுப்பாளர்களின் கூட்டத்தை கோவில் முன்பு நடத்த அனுமதி அளித்து இந்துக்களை இழிவு படுத்துவது எந்த வகையில் நியாயம்?

தொடர்ந்து திமுக அரசு இத்தகைய பொதுக்கூட்டத்திற்கு அனுமதி அளிப்பது மதக்கலவரங்களை ஏற்படுத்துவதற்காகவே என்று மக்கள் எண்ணுகிறார்கள்.கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்காசி மாவட்டம் சேர்ந்தமரத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவிலும் புளியங்குடி டிஎஸ்பி அசோக் இதே போல் பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார் இந்து கோவில் விழாக்களின் போது இந்துக்கள் மீது தாக்குதல் நடத்துவதை டிஎஸ்பி அசோக் வாடிக்கையாக வைத்துள்ளார் இது மிகுந்த கண்டனத்துக்குரியதாகும் ஆகவே DSP யை சஸ்பெண்ட் செய்து அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories