ராகுல் தகுதி நீக்கம் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு..

ராகுல்காந்தி தகுதி நீக்க விவகாரத்தில் ஏற்பட்ட அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவை வழக்கம்போல் 11 மணிக்கு தொடங்கின. இரு அவைகளிலும் எதிர்க்கட்சி சார்ந்த எம்.பி.க்கள், ராகுல் காந்தி தகுதி நீக்கம்தொடர்பாக தங்களது கருத்துக்களை பேசவேண்டும்.

மேலும், அவையை ஒத்திவைத்து விட்டு இது குறித்து விவாதிக்க வேண்டும். நாடாளுமன்ற மக்களவையில் இருந்து ராகுல் காந்தி அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நீக்கப்பட்டுள்ளார் என பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர்.

966640 - 2026

இது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதால் நாடாளுமன்றத்தின் மக்களவையில் இது குறித்து காங்கிரஸ் கட்சி, திமுக, வி.சி.க. உள்ளிட்ட ஏராளமான எதிர்கட்சி எம்.பி.கள் ஒத்திவைப்பு தீர்மானம் வழங்கியிருந்தது. ஆனால், அவை தொடங்கிய உடனே எதிர்க்கட்சி எம்.பி.கள் மக்களவையில் எம்.பி பதவியிலிருந்து ராகுல் காந்தியை தகுதிநீக்கம் செய்ததை கண்டித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆளும்கட்சி பாஜக எம்.பி.கள் எதிர்த்து குரல் எழுப்பினார்கள். இரு தரப்பினருமே ஒரே நேரத்தில் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை மாலை 4 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதே நிலைதான் நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் நீடித்தது. ராகுல் காந்தி தகுதி நீக்கம், ராகுலின் லண்டன் பேச்சு மற்றும் அதானி குழும விவகாரத்தால் அமளி ஏற்பட்டது. இதனால் அவைத்தலைவர் ஜகதீப் தன்கர் அவையை 2 மணி வரை ஒத்திவைத்தார்.

கடந்த 13-ம் தேதி தொடங்கிய நாடாளுன்றம் பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டாவது அமர்வு இதுவரை ஒரு நாள் கூட சரியாக, முழுமையாக இயங்கவில்லை. தொடர்ந்து ஆளுங்கட்சி, எதிர்கட்சியின் முழக்கத்தால் இரு அவைகளும் ஒத்துவைக்கப்பட்டு இருக்கிறது.

கடந்த 2 தினங்கள் விடுமுறைக்கு பிறகு இன்றைய தினம் நாடாளுமன்றதின் இரு அவைகளும் துவங்கிய 20 வினாடிகளிலேயே தொடர் அமளியில் காரணமாக இன்றும் முடங்கியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories