விருதுநகர் -கைதிகள் போலீசார் மீது தாக்குதல் நடத்தியவர்கள் கைது..

images 57 - 2026
#image_title

விருதுநகரில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இரண்டு கைதிகளை போலீசார் மீது மிளகாய் பொடி தூவி விட்டு பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் இச்சமயத்தில் ஈடுபட்ட வர்களில் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் அருகே உள்ள வேடப்பட்டி ஞானநந்தகிரி நகர் பகுதியை சேர்ந்தவர் சின்னத்தம்பி (34) இவர் வெள்ளைப் பூண்டு வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 02.03.2023ம் தேதி தனது வீட்டிற்கு அருகே உள்ள தனது சகோதரர் வீட்டிற்கு சென்ற போது பட்டப்பகலில் வீடு புகுந்து சின்னத்தம்பியை 5 பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்தனர்.

இந்த கொலை வழக்கில் லிடியா மேரி(25), மேட்டுப்பட்டி எம்ஜிஆர் நகரை சேர்ந்த ஆரோக்கிய ஜெயராம் என்ற சின்னவர்(29) மற்றும் மேட்டுப்பட்டியை சேர்ந்த மகேந்திரன் என்ற பானை மகேந்திரன்(25) ஆகிய யுவராஜ் (29) மற்றும் விக்னேஷ் (29) ஆகியோரை திண்டுக்கல் தாலுகா போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்

ALSO READ:  பிரசாரத்தில் இருந்த திமுக., வேட்பாளர்; வீட்டில் 122 பவுன் நகை கொள்ளை!

இந்த நிலையில் கடந்த மார்ச் 16ம் தேதி சின்னதம்பி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட யுவராஜ் (29) மற்றும் விக்னேஷ் (29) ஆகிய இரண்டு பேரை பாதுகாப்பு காரணங்களுக்காக திண்டுக்கல் சிறையில் இருந்து விருதுநகர் மாவட்ட சிறைக்கு மாற்றப்பட்டனர்.

இந்த நிலையில் யுவராஜ் மற்றும் விக்னேஷ் இருவருக்கும் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் போலீசார் பாதுகாப்புடன் மார்ச் 22ம் தேதி முதல் சிகிச்சை பெற்று வந்தனர்.

இவர்கள் இரண்டு பேருக்கும் திண்டுக்கல் ஆயுத படை காவலர்களான சிலம்பரசன் மற்றும் அழகுராஜா ஆகிய இரண்டு பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்து உள்ளனர்.

இந்த நிலையில் இன்று காவலர்கள் சிலம்பரசன் மற்றும் அழகு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்த போது பயங்கர ஆயுதங்களுடன் முகமுடி அணிந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் காவலர்கள் சிலம்பரசன் மற்றும் அழகுராஜா மீது மிளகாய் பொடி தூவி விட்டு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த யுவராஜ் மற்றும் விக்னேஷ் மீது சரமாரி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் கைதிகள் இருவரும் படுகாயம் அடைந்தனர்.

ALSO READ:  சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

பின்னர் காவலர் சிலம்பரசன் துப்பாக்கி சூடு நடத்த போவதாக எச்சரிக்கை விடுத்ததை எடுத்து மர்ம கும்பல் 5 பேரும் தப்பி ஓடி உள்ளனர்

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த விருதுநகர் கிழக்கு காவல் நிலைய போலீசார் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் சம்பவ சம்பவம் நடைபெற்ற விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு விருதுநகர் மாவட்ட எஸ்பி நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார் மேலும் கைதிகளுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காலு இடமும் தனித்தனியே விசாரணை மேற்கொண்டார்

மேலும் மர்ம கும்ப கும்பல் நடத்திய தாக்குதலில் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட கைதிகளான யுவராஜ் மற்றும் விக்னேஷ் பலத்த காயம் அடைந்து விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பலத்த பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்

காவலர்கள் மீது மிளகாய் பொடி தூவி விட்டு பயங்கர ஆயுதங்களுடன் கைதிகளை தாக்கிய சம்பவம் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ALSO READ:  சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Entertainment News

Popular Categories