30-05-2023 1:26 AM
More

    Shut up. Shall We?

    A Centenary Plus, Retold 

    Homeசற்றுமுன்ரயிலில் சிறுவர்களை கடத்தி சென்ற 7 பேர் கொண்ட கும்பல் கைது..
    spot_img

    சினிமா...

    Featured Articles

    To Read in Indian languages…

    ரயிலில் சிறுவர்களை கடத்தி சென்ற 7 பேர் கொண்ட கும்பல் கைது..

    500x300 1869207 childrens

    ஆந்திராவில் இருந்து ரெயிலில் சிறுவர்களை கடத்தி சென்ற 7 பேர் கொண்ட கும்பலை கைது செய்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஆந்திராவில் இருந்து ரெயிலில் சிறுவர்களை கடத்தி செல்வதாக வாரங்கல் ரெயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. வாராங்கல் ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் மற்றும் குழந்தைகள் நல குழுவினர் அந்த வழியாக வந்த கோனார்க் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அதிரடியாக சோதனை செய்தனர். அப்போது 7 பெட்டிகளில் தனித்தனியாக சிறுவர்களை கடத்தி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் ரெயில் பெட்டிகளில் இருந்த 42 சிறுவர்களை மீட்டனர். இது தொடர்பாக 7 பேர் கொண்ட கும்பலை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் ஆந்திராவில் பல்வேறு பகுதிகளிலிருந்து சிறுவர்களை வேலைக்காக மும்பை, செகந்திராபாத்திற்கு அழைத்து செல்வதாக தெரிவித்தனர்.

    மீட்கப்பட்ட சிறுவர்களில் 13 பேரின் முகவரி கண்டு பிடிக்கப்பட்டு அவரது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். மீதமுள்ளவர்கள் காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டனர். விரைவில் காப்பகத்தில் உள்ள சிறுவர்கள் அவரது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என குழந்தைகள் நல அலுவலர்கள் தெரிவித்தனர். சிறுவர்களை பெற்றோர் அனுமதியுடன் வேலைக்கு அழைத்து சென்றார்களா அல்லது கடத்தப்பட்டார்களா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    four × three =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Follow us on Social Media

    19,024FansLike
    389FollowersFollow
    83FollowersFollow
    0FollowersFollow
    4,749FollowersFollow
    17,300SubscribersSubscribe

    ஆன்மிக