போலீசாரை தாக்கியதாக ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா தலைவர் கைது ..

500x300 1871282 shar - 2026
#image_title

ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை சர்மிளா போலீசாரை தாக்கியதாக சர்மிளா மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் பின்னர் அவரை கைது செய்தனர்.இச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை சர்மிளா தெலுங்கானாவில் ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா எனும் புதிய கட்சியை தொடங்கினார். கட்சி தொடங்கியது முதலே தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவையும் அவரது அமைச்சர்களையும் கடுமையாக விமர்சனம் செய்து பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில் தெலுங்கானா பொதுத் தேர்வானையம் நடத்திய தேர்வில் வினாத்தாள்கள் கசிந்தது. இந்த விவகாரம் தொடர்பாக சர்மிளா எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தினார். இதையடுத்து தெலுங்கானா அரசு வினாத்தாள் வெளியானது குறித்து விசாரணை நடத்த சிறப்பு குழு ஒன்றை அமைத்தது.

நேற்று சர்மிளா ஐதராபாத்தில் உள்ள தனது வீட்டிலிருந்து சிறப்பு குழு அலுவலகத்திற்கு செல்ல தனது தாயார் விஜயலட்சுமியுடன் வெளியே வந்தார். அப்போது வீட்டிற்கு வெளியே இருந்த போலீசார் சர்மிளா மற்றும் அவரது தாயாரை தடுத்து நிறுத்தினர்.

இதனால் ஆத்திரம் அடைந்த சர்மிளா பெண் போலீஸ் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரை தாக்கினார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து போலீசாரை தாக்கியதாக சர்மிளா மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் சர்மிளாவை கைது செய்தனர்.

ALSO READ:  மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

அவரை நாம் பள்ளி கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். சர்மிளாவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இதை தொடர்ந்து ஐதராபாத்தில் உள்ள அஞ்சல் குடா ஜெயிலில் சர்மிளா அடைக்கப்பட்டார்.

சர்மிளாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று அவசர வழக்காக விசாரிக்கப்பட உள்ளது. சர்மிளாவின் தாயார் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 29 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

ஒரு தேசத்தின் ஆன்மா, அதன் மக்கள் தாம்.  மேலும் அந்த தேசத்தின் மக்கள் உறுதி பூண்டார்கள் என்று சொன்னால், எந்த ஒரு சக்தியாலும் அவர்களை அவர்களின் கனவிலிருந்து அகற்றிவிட முடியாது.   தேச நிர்மாணத்திலே மக்களின் பங்களிப்பின் இந்தச் சக்தி

கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

ஆண் பெண் உறவை நெறிப்படுத்த தர்மமும் மரபும் சில விதிமுறைகளை வகுத்தன. அவை குடும்ப அமைப்பை வலுப்படுத்தவும், சமுதாயத்தில் ஒழுக்கம்,  பண்பாடு, பாதுகாப்பு போன்றவற்றைப் பேணவும் உதவுகின்றன. 

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 29 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

ஒரு தேசத்தின் ஆன்மா, அதன் மக்கள் தாம்.  மேலும் அந்த தேசத்தின் மக்கள் உறுதி பூண்டார்கள் என்று சொன்னால், எந்த ஒரு சக்தியாலும் அவர்களை அவர்களின் கனவிலிருந்து அகற்றிவிட முடியாது.   தேச நிர்மாணத்திலே மக்களின் பங்களிப்பின் இந்தச் சக்தி

கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

ஆண் பெண் உறவை நெறிப்படுத்த தர்மமும் மரபும் சில விதிமுறைகளை வகுத்தன. அவை குடும்ப அமைப்பை வலுப்படுத்தவும், சமுதாயத்தில் ஒழுக்கம்,  பண்பாடு, பாதுகாப்பு போன்றவற்றைப் பேணவும் உதவுகின்றன. 

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

Entertainment News

Popular Categories