விருதுநகர் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி மூவர் பலி..

Published:

IMG 20230429 WA0069 - 2026
#image_title

விருதுநகர் மாவட்டத்தில் திருச்சுழி சிவகாசி பகுதியில் மின்சாரம் தாக்கி மூவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா எம்.புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் மகன் ஹரிஷ் குமார் (15) , என்பவர் விருதுநகரில் உள்ள ஒரு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து முடித்துள்ளதாகவும் மேலும் அதே ஊரைச் சேர்ந்த கருப்பசாமி மகன்
ரவிச்செல்வம் (17) இவர்‌நரிக்குடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து முடித்துள்ளார் .

IMG 20230429 WA0070 - 2026
#image_title

தற்போது பள்ளி இறுதித் தேர்வு முடிவடைந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் சர்வீஸ் குமாரும் ரவி செல்வமும் மேலேந்தல் அருகே புதிதாககட்டப்பட்டு வரும் அரசு கலைக் கல்லூரி கட்டிடத்திற்கு வேலைக்கு சென்றுள்ளனர்.

இந்த நிலையில்
சென்டிரிங் வேலை பார்த்து வந்தபோது அங்கிருந்த வெல்டிங் வயர் சென்றதை கவனிக்காமல் மிதித்ததால் ஹரிஷ் குமார் மற்றும் ரவிச்செல்வம் ஆகியோர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.இறந்தவர்களின் உடலை நரிக்குடி போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து திருச்சுழி போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெகநாதன் தலைமையிலான போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

பள்ளிப்படிப்பை முடித்து விடுமுறைக்கு வேலைக்கு சென்ற மாணவர்கள் இருவர் இறந்ததுஅந்த பகுதியில் உள்ள பொதுமக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

சிவகாசியில் ..

IMG 20230429 WA0072 - 2026
#image_title

சிவகாசியில் கேபிள் வயரை சரி செய்த ஆட்டோ ஓட்டுநர் மின்சாரம் தாக்கி பலியானார்.

சிவகாசி அருகே திருத்தங்கல் பாலாஜி நகரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பால் கண்ணன் (வயது 36). இவருக்குமோனிஷா என்ற மனைவியும், தவமுனீஸ்வரி 7, என்ற மகள் வெற்றிவேல் 4 என்ற மகனும் உள்ளனர்.

பால் கண்ணனின் வீட்டிற்கு அருகில் உள்ள மர கிளைகளை வெட்டியதை அகற்றும் போது இவரது வீட்டிற்கு வரும் கேபிள் வயர் மரம் வெட்டும் பணியின் போது அறுந்ததால் அதனை அவரே சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கேபிள் வயரில் மின்சாரம் பாய்ந்து ஆட்டோ டிரைவர்
பால்கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.விபத்து குறித்து உடலை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனை உடற் கூர்வு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இச்சம்பவம் திருத்தங்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img