2024 மக்களவை தேர்தல் தமிழகம் புதுவை மில் 40 தொகுதியிலும் வெற்றி-அண்ணாமலை ..

images 18 - 2026
#image_title

தமிழகத்தில் திமுகவுக்கு எதிராக இருக்கின்ற மக்களின் மனநிலையை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எவ்வாறு வாக்குகளாக மாற்றப்போகிறோம் என்பதுதான் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இருக்கின்ற சவால் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது:

“அதிமுகவின் தலைவர்கள், குறிப்பாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் அனைவருமே, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரைச் சந்திக்க வந்தபோது நானும் உடன் இருக்க வேண்டும் என்று என்னை தொலைபேசியில் அழைத்திருந்தனர்.

அந்த அழைப்பின்படி, எடப்பாடி பழனிசாமி, அதிமுக முன்னாள் அமைச்சர்கள், பாஜக மாநிலத் தலைவரான நான் உட்பட அனைவருமே கலந்து பேசினோம். குறிப்பாக, 2024ல் நம்முடைய இலக்கு, திமுக ஆட்சி மீது மக்கள் எத்தகைய கோபத்தில் இருக்கின்றனர்? திமுக ஆட்சி மக்களுக்கு எதிராக எப்படி மாறியிருக்கிறது? என்பதை சமீப காலமாக பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

அதனடிப்படையில், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வேண்டும். அதேபோல் புதுச்சேரியிலும் வெற்றி பெற்று, 40க்கு 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று, பாரத பிரதமர் 400 எம்பிக்களுடன் மீண்டும் 3வது முறையாக ஆட்சி அமைக்க வேண்டும்.

இந்த கருத்தை நானும், அதிமுக தலைவர்களும் பாஜக தேசிய தலைவர்களிடம் முன்வைத்தோம். நிச்சயமாக அது நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

2024 நாடாளுமன்றத் தேர்தலில், பாஜக எத்தனை இடங்களில் போட்டியிடும், கூட்டணிக் கட்சிகள் எத்தனை இடங்களில் போட்டியிடுவார்கள் என்பது குறித்து முடிவு செய்ய இன்னும் நேரமும் காலமும் இருக்கிறது.

எனவே இந்த நேரத்தில் தொகுதி பங்கீடு குறித்தோ, எந்த தொகுதியில் யார் போட்டியிடுவார்கள் என்பது குறித்து பேச வேண்டிய அவசியம் இல்லை. இந்த நேரத்தில் நாங்கள் பேசியது, திமுகவுக்கு எதிராக இருக்கின்ற மக்களின் மனநிலையை எப்படி தேசிய ஜனநாயக கூட்டணி பக்கம் திருப்பி, 39 தொகுதிகளிலும் வெற்றி பெறுவது என்பது குறித்துதான்.

தமிழகத்தில் திமுகவுக்கு எதிராக இருக்கின்ற மக்களின் மனநிலையை எப்படியெல்லாம் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குகளாக மாற்றப்போகிறோம் என்பதுதான் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இருக்கின்ற சவால். ஊழலுக்கு எதிராக பாஜக தொடர்ந்து போராடும். ஊழலுக்கு எதிராக பாஜக இருக்கிறது.” என்று அண்ணாமலை கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

Topics

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories