கேரளாவில் சுற்றுலாப் படகு கவிழ்ந்து 21 பயணிகள் பலி

images 55 - 2026
#image_title

கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்து, 21 போ் உயிரிழந்தனா். இவா்களில் பெரும்பாலானோா் குழந்தைகள்.

மலப்புரம் மாவட்டத்தின் தானூா் பகுதியில் உள்ள தூவல்தீரம் கடற்கரையில் சுற்றுலாப் படகு ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணியளவில் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.  விபத்துக்குள்ளான சுற்றுலாப் படகில் 40-க்கும் மேற்பட்டோா் இருந்ததாகக் கூறப்படுகிறது.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும், காவல் துறை, தீயணைப்புத் துறை, வருவாய் மற்றும் சுகாதாரத் துறையினா் விரைந்து சென்று, மீட்புப் பணியை தொடங்கினா்.

IMG 20230508 WA0069 1 - 2026
#image_title

பலியான 20 பேர் மீட்கப்பட்ட நிலையில், 15 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. பலியானவர்களில் 6 பேர் குழந்தைகள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. போலீசார், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் மற்றும் மீனவர்கள் ஆற்றில் உயிர் பிழைத்தவர்களை தேடி வருகின்றனர். ஆனால், போதிய வெளிச்சமின்மையும், குறுகிய சாலைகளும் மீட்புப் பணிக்கு சவாலாக உள்ளது.

மீட்கப்பட்டவர்கள் பரப்பனங்காடி நஹாஸ் மருத்துவமனை, ஜே எஸ் மிஷன் மருத்துவமனை, திரூரங்கடி தாலுகா மருத்துவமனை மற்றும் கோட்டக்கல் மற்றும் தனூரில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மீட்புப் பணிகளை துரிதப்படுத்துமாறு மலப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.

விபத்து நடந்த இடத்தில் ஆறு ஆழமாக இருந்ததாகவும், படகின் அடியில் சிக்கியவர்களை மீட்பது கடினமான பணி என்றும் மீனவர்கள் தெரிவித்தனர். ஆற்றில் மூழ்கிய படகு சதுப்பு நிலத்தில் சிக்கியதால், அதை கரைக்கு இழுக்கும் முயற்சி நடந்து வருகிறது.

மூழ்கிய படகில் சில சுற்றுலாப் பயணிகள் சிக்கியிருக்கலாம் என சந்தேகம் இருப்பதாக மீட்புப் பணியாளர்கள் தெரிவித்தனர்.

கேரள விளையாட்டுத் துறை அமைச்சா் வி.அப்துர்ரஹிமான், சுற்றுலாத் துறை அமைச்சா் பி.ஏ.முகமது ரியாஸ் ஆகியோா் மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனா். உயிருடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளில் சோ்க்கப்பட்டுள்ள சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அமைச்சா் வி.அப்துர்ரஹிமான் கூறுகையில், ‘தற்போது பள்ளி விடுமுறை என்பதால், படகு சவாரிக்காக குழந்தைகளுடன் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனா். படகில் அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றியதே விபத்துக்கான காரணம் என கூறப்படுகிறது. படகுக்கு அடியில் பலா் சிக்கியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அவா்களை மீட்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்’ என்றாா்.

முன்னாள் அமைச்சரும், அப்பகுதி எம்எல்ஏவுமான பி.கே.குஞ்ஞாலிக்குட்டி கூறுகையில், ‘உயிரிழந்தவா்களில் பெரும்பாலானோா் குழந்தைகளாவா். மீட்புப் பணிகள் தொடா்வதால் பலி எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளது. மாலை 6 மணிக்கு மேல் படகு சவாரிக்கு அனுமதியில்லை. இச்சம்பவத்தில் விதிமீறல் நடந்துள்ளது’ என்றாா்.

படகு விபத்தில் நேரிட்ட உயிரிழப்புகளுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வா் பினராயி விஜயன், சம்பவ இடத்தை இன்று திங்கள்கிழமை பாா்வையிட உள்ளாா். அவசரகால அடிப்படையில் மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்க மாவட்ட ஆட்சியருக்கு அவா் உத்தரவிட்டுள்ளாா்.

மீட்புப் பணிகளையும் மருத்துவமனை சிகிச்சை நடவடிகக்கைளையும் மேற்பாா்வையிட சுகாதாரத் துறை அமைச்சா் வீணா ஜாா்ஜ் சிறப்புக் குழு ஒன்றை அமைத்துள்ளாா்.

பிரதமா் இரங்கல்; நிவாரணம் அறிவிப்பு:
பிரதமா் நரேந்திர மோடி வெளியிட்ட இரங்கல் பதிவில், கேரளத்தின் மலப்புரத்தில் படகு கவிழ்ந்து மக்கள் உயிரிழந்ததை அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். பிரதமா் நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தோா் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories