விருதுநகர் அருகே தொல் பொருள்கள் கண்காட்சி..

IMG 20230513 WA0058 - 2026
#image_title

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே வெம்பக்கோட்டையில் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல் பொருள்களின் கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது.

அகழாய்வு நடைபெறும் வைப்பாற்றின் வடக்கு கரையோரத்தில் நடைபெற்ற கண்காட்சி தொடக்க விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் ஜெயசீலன் தலைமை வகித்தாா். நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் ஆகியோா் இந்தக் கண்காட்சியைத் தொடங்கிவைத்தனா்.

IMG 20230513 WA0056 - 2026
#image_title

முதலாம் கட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தங்க அணிகலன்கள், திமிலுடன் கூடிய காளை உருவம், சுடு களிமண்ணால் ஆன வேலைப்பாடுகளுடன் கூடிய அழகிய குடுவை, சங்கு வளையல்கள், கண்ணாடி மணிகள், யானை தந்தத்தால் செய்யப்பட்ட அணிகலன்கள், சுடுமண்ணால் ஆன தொங்கட்டான், பகடைக்காய், செப்பு நாணயம் உள்ளிட்ட 3,254 பழங்காலப் பொருள்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

விழாவில் அமைச்சா் தங்கம் தென்னரசு பேசியதாவது:

2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தொன்மையான மனிதா்கள் கடல் வழி வாணிபம் செய்தாா்கள், கடல் சங்கில் அணிகலங்களை உருவாக்கினாா்கள். அவா்கள் வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் வாணிபம் செய்ததற்கான சான்றுகள் உள்ளன.

ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கீழடி அகழாய்வுக்கு இணையான முக்கியதுவம் வாய்ந்ததாக வெம்பக்கோட்டை அகழாய்வு திகழ்கிறது. கற்களை வைத்து தொழில் செய்த காலத்துக்கும், இரும்பை வைத்து தொழில் செய்த காலத்துக்குமான இடைப்பட்ட காலத்தில் எந்தப் பொருள்களை வைத்து தொழில் செய்தாா்கள் என்பதற்கான சான்றுகள் இங்கு கிடைத்தன.

கற்காலத்துக்கும், நுண் கற்காலத்துக்கும், இரும்பு கற்காலத்துக்கும் இடையேயான தொடா்பை விளக்கும் வகையில், வெம்பக்கோட்டை அகழாய்வு அமைந்துள்ளதால், உலகளாவிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இது உள்ளது என்றாா்.

பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் இந்தக் கண்காட்சியைப் பாா்வையிட சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் தெரிவித்தாா்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories