செங்கோட்டையில் மீண்டும் பிட்லைன் வசதி: ரயில் பயணிகள் நல சங்கத்தினர் கோரிக்கை!

thenmala tran track - 2026
#image_title

கடந்த மே.15 திங்கள் அன்று, தனி ரயிலில் திருவனந்தபுரத்திலிருந்து கொல்லம், புனலூர் வழியாக செங்கோட்டைக்கு மாலை 4.40 க்கு வந்த தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்க செயலாளர் கிருஷ்ணனும் பொருளாளர் சுந்தரமும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர். அந்த மனுவில் இடம்பெற்றுள்ள கோரிக்கைகளாவன….

கோரிக்கைகள் விவரங்கள் –
1) அடுத்த கட்ட அம்ருத பாரத் ரயில் நிலைய முன்னேற்ற திட்டத்தில் செங்கோட்டை ரயில் நிலையத்தை சேர்க்க வேண்டும்.

2)செங்கோட்டை – சென்னை பொதிகை அதிவேக ரயிலுக்கு ( எண் 12662) மாம்பலம் நிறுத்தம் வழங்க வேண்டும்.

3)செங்கோட்டை ரயில் நிலையத்தில் பிட்லைன் வசதி செய்து தரப்பட வேண்டும். அப்போதுதான் செங்கோட்டையிலிருந்து தென்காசி ராஜபாளையம் விருதுநகர் வழியாகவும் , தென்காசி பாவூர்சத்திரம் அம்பாசமுத்திரம் திருநெல்வேலி வழியாகவும் பிற மாநிலங்களுக்கு புதிய ரயில்களை இயக்க முடியும்.

4)செங்கோட்டை ரயில் நிலையத்தில் தற்போதுள்ள 4 நடைமேடைகளோடு புதிதாக 5வது நடைமேடையை அமைக்க வேண்டும்.

5)செங்கோட்டை ரயில் நிலைய கணினி முன்பதிவு மையம் தினசரி காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட வேண்டும்.

6)செங்கோட்டை , தென்காசி ரயில் நிலைய நடைமேடைகளில்
லிப்டுகளை அமைக்க ஏற்கனவே ஆணை பிறப்பிக்கப்பட்டும் இன்றளவும் நிறுவப்படவில்லை.அவற்றை விரைவில் நிறுவ வேண்டும்.

7)தற்போது இயங்கி கொண்டிருக்கும் வாராந்திர ரயில்கள் – நெல்லை – மேட்டுப்பாளையம் & நெல்லை தாம்பரம் – வழி அம்பாசமுத்திரம் பாவூர்சத்திரம் தென்காசி ராஜபாளையம் விருதுநகர் – இவை இரண்டையும் நிரந்தர ரயில்களாக்க ஆவன செய்ய வேண்டும்.

8)எர்ணாகுளத்திலிருந்து கொல்லம் புனலூர் செங்கோட்டை தென்காசி ராஜபாளையம் வழியாக வேளாங்கண்ணிக்கு வாரம் ஒருமுறை மே 2023 இறுதி வரை இயக்கப்படும் ரயிலை வாரம் இரு முறை நிரந்தரமாக இயக்க வேண்டும்.

9)சபரிமலை சீசனில் இயக்கப்பட்ட எர்ணாகுளம் – தாம்பரம் ரயில்களை ஜூன் 2023 முதல் அக்டோபர் 2023 வரை குற்றால சீசன் ஸ்பெஷல் ரயில்களாக இயக்க வேண்டும்.

10) தற்போது 12 பெட்டிகளோடு ஓடும் செங்கோட்டை – மயிலாடுதுறை , மயிலாடுதுறை – செங்கோட்டை முன்பதிவில்லாத விரைவு ரயில்களில் கூடுதலாக இரண்டு முன்பதிவில்லாத பெட்டிகளையும் இரண்டு முன்பதிவுடைய இரண்டாம்வகுப்பு செயர் கார்கள் பெட்டிகளையும் இணைக்க வேண்டும்.தற்போது எல்லா ஊர்களிலும் இந்த ரயில்களில் கட்டுக்கடங்காத கூட்டம் ஏறுவதால் பலருக்கு உட்கார இடம் கிடைப்பதில்லை.

11) நெல்லை – திருவனந்தபுரம் இடையே அம்பை பாவூர்சத்திரம் தென்காசி செங்கோட்டை புனலூர் கொல்லம் வழியாக தினசரி ரயில்கள் காலையிலும் மாலையிலும் இரு வழிகளிலும் இயக்கப்பட வேண்டும்.

12) வழித்தடங்கள் மின்மயமாக்கல் நிறைவு பெற்றதும் கொல்லம் – புனலூர் – செங்கோட்டை – தென்காசி – ராஜபாளையம் – விருதுநகர் பாதையிலும் கொல்லம் – புனலூர் – செங்கோட்டை – தென்காசி – பாவூர்சத்திரம் – அம்பாசமுத்திரம் – திருநெல்வேலி பாதையிலும்
MEMU ரயில்களை இயக்க வேண்டும்.

13) தற்போது கொல்லம் – புனலூர் – செங்கோட்டை பாதையில் பயணிகள் ரயில்கள் 14 பெட்டிகளுடன் மட்டுமே ஓடுகின்றன.ஆவன செய்து விரைவில் 18 பெட்டிகள் பயணிகள் ரயில்களை இயக்க வேண்டும்.

14)செங்கோட்டை தென்காசி பாவூர்சத்திரம் அம்பாசமுத்திரம் மற்றும் கடையநல்லூர் சங்கரன்கோவில் ராஜபாளையம் ஶ்ரீவில்லிபுத்தூர் சிவகாசி நகர மக்களுக்கு பெங்களூர் செல்ல நேரடி ரயில் வசதி தற்போது இல்லை.எனவே திருநெல்வேலியிலிருந்து அம்பாசமுத்திரம் பாவூர்சத்திரம் தென்காசி ராஜபாளையம் சிவகாசி விருதுநகர் மதுரை நாமக்கல் ஓசூர் வழியாக பெங்களூருக்கு வாராந்திர ரயில் இயக்கப்பட வேண்டும்.

15) தெற்கு வட்டார ரயில்வே கால அட்டவணை குழு சில ஆண்டுகளுக்கு முன் பரிந்துரைத்தபடி தற்போது குருவாயூர் – புனலூர் இடையே இயங்கி கொண்டிருக்கும் தினசரி விரைவு ரயிலை செங்கோட்டை தென்காசி ராஜபாளையம் சிவகாசி வழியாக மதுரைக்கு நீட்டிக்க விரைவில் ஆணை பிறப்பிக்க வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories