அரிகேசவ நல்லூரில் திருக் குளத்தைத் துப்புரவு செய்த நெல்லை உழவாரப் பணிக் குழு!

IMG 20230606 WA0035 - 2026
#image_title

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற திருத்தலம் அரிகேசவநல்லூர். இங்கே கோயில் கொண்டிருக்கும் பெரியநாயகி அம்பாள் உடனுறை அரியநாதரை வணங்கிச் செல்பவர்கள் வாழ்வில் அனைத்து நலன்களையும் பெறுகின்றனர். இதனால் பக்தர்கள் அதிகம் வரும் கோயிலாக இது விளங்குகிறது.

இந்தக் கோயிலிலுள்ள திருக்குளம் அசுத்தமடைந்து துர்நாற்றம் வீசியதுடன், பக்தர்கள் முகம் சுளித்துச் செல்லும் வகையில் இருந்தது. இந்த நிலையில், இந்தக் குளத்தைத் தூர்வாரி தூய்மைப் படுத்தும் பணியை ஏற்றுக் கொண்டார்கள் நெல்லை உழவாரப் பணிக் குழுவினர். கடந்த ஜூன் மாதம் 4ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த குழுவினர் கோயில் குளத்தை சுத்தப்படுத்த களத்தில் இறங்கினர்.

இது குறித்து நெல்லை உழவாரப் பணிக் குழாமைச் சேர்ந்தவர்கள் கூறிய போது, தென்பாண்டிச் சீமையில் திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி நதிக்கரையில் பஞ்சகுருத்தலங்களில் ஒன்றாக விளங்குவது அருள்மிகு அரியநாத சுவாமி ஆலயம். இது சுமார் 1400 வருடங்களுக்கு முன்பு கூன் பாண்டியன் என்பவரால் முற்றுப் பெற்றது. இங்குள்ள ஈசன் அரியநாத சுவாமி, இன்றும் நமக்கெல்லாம் அருள்பாலித்து கொண்டிருக்கிறார்.

இந்தப் பெருமானுக்கு தொண்டு செய்பவர்கள், அவர்களின் குற்றங்களை நீக்கி, குறைகளைப் போக்கி, பையில் ஒரு கட்டு பணத்தையும் திணித்து, வாழ்த்தி அனுப்புவதைப் போன்ற அருளை உணர்வார்கள்.

தற்போது வரவிருக்கும் பெருஞ்சாந்தி விழாவினை முன்னிட்டு திருக் குளத்தை தூர் வாருவது பெரும் பேறு. குறிப்பாக வாஸ்துப் படி, ஒரு தலத்தின் திருக்குளம் கழிவு மண்டி, துப்புரவு இன்றிக் கிடந்தால், அங்குள்ள பெண்களுக்கு வயிற்று வலி, மாதவிலக்கு சிரமங்கள், கர்ப்ப் பை கோளாறுகள் என வெளியில் சொல்லாமலே, விளக்கம் தெரியாமலே நோவார்கள் என்று பெரியோர் கூறுவர்.

இதனால், இம்மக்களின் நன்மையை முன்னிட்டும், ஆலயத் திருக்குளத்தைப் பாதுகாக்கும் படியும் அரியநாதரின் திருக்குளத்தை துப்புரவு செய்யும் பணியில் நாங்கள் ஈடுபட்டோம்.. இந்தப் பணியில், கன்னியாகுமரியில் இருந்து 20 பேர், நாகர்கோவிலில் இருந்து 25 பேர், தூத்துக்குடியில் இருந்து 30 பேர், நெல்லை உழவாரப் பணிக் குழாமைச் சேர்ந்த 30 பேர், இந்து ஆலய பாதுகாப்புக் குழுவைச் சேர்ந்த 95 பேர் மற்றும் உள்ளூர்க்காரர்கள் சிலர் என 300க்கும் மேற்பட்டவர்கள் பெரும் ஈடுபாட்டுடன் கலந்து கொண்டார்கள். கோயிலையும் குளத்தையும் பாதுகாத்து, அனைவரும் இறையருள் பெற்று சுகமாய் வாழ வேண்டும் என்பதே நம் பிரார்த்தனை என்று குறிப்பிட்டார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து23பேர் உயிரிழந்த நிலையில் பட்டாசு...

Topics

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து23பேர் உயிரிழந்த நிலையில் பட்டாசு...

பஞ்சாங்கம் ஏப்ரல் 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலியான...

பஞ்சாங்கம் ஏப்ரல் 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories