மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்டது! ஆனால், கருணாநிதி பெயர் வைக்க மாநகராட்சி ‘தீர்மானம்’!

salem municipal corporation - 2026
#image_title

மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட சேலம் ஈரடுக்கு பேருந்து நிலையத்துக்கு கருணாநிதி பெயர் சூட்டப்படுவதாக, மாநகராட்சி அவசரக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளதும், இந்தப் பேருந்து நிலையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறக்க உள்ளதும் இப்போது விவாதத்திற்கு உள்ளாகியிருக்கிறது.

சேலம் மாநகராட்சி அவசரக் கூட்டம் இன்று மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர்(பொறுப்பு) அசோக்குமார், துணை மேயர் சாரதா தேவி முன்னிலை வகித்தனர். இந்தக் கூட்டத்தில், பழைய பேருந்து நிலையத்திற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர் வைக்குமாறு திமுக., கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். முதல்வர் ஸ்டாலினால் வருகின்ற 11-ஆம் தேதி திறக்கப்பட உள்ள வணிக வளாகங்கள் குறித்தும், நலத்திட்ட உதவிகள் குறித்தும் அப்போது விவாதிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்தக் கூட்டத்தில் ஆளுங்கட்சி தலைவர் ஜெயக்குமார், சேலம் ஈரடுக்கு பேருந்து நிலையத்துக்கு ‘‘முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு ஈரடுக்கு பேருந்து நிலையம்‘”’ என்றும், வணிக வளாகத்திற்கும் கருணாநிதி பெயரையே வைத்தும் அவசர தீர்மானம் கொண்டுவந்தார். இந்தத் தீர்மானம் கூட்டத்தில் நிறைவேறியது.

ஆளுங்கட்சியினரின் இந்த அவசரத் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக., எதிர்க்கட்சி தலைவர் யாதவமூர்த்தி, கே.சி.செல்வராஜ், ஜனார்த்தனன், சந்திரா, மோகனபிரியா உள்ளிட்ட 6 அதிமுக., கவுன்சிலர்கள் கோஷங்கள் எழுப்பியவாறு கூட்டத்தை புறக்கணித்தனர்.

இதுகுறித்து அதிமுக., எதிர்க்கட்சி மாமன்ற உறுப்பினர் யாதவமூர்த்தி கூறும்போது, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஈரடுக்கு பேருந்து நிலையம், வணிக வளாகம் உள்ளிட்டவை அதிமுக., ஆட்சியில் திட்டமிடப்பட்டு கட்டி முடிக்கப்பட்டது. தற்போது திறப்பு விழா நடைபெறுகிறது.

ஆண்டாண்டு காலமாக பழைய பேருந்து நிலையத்தில் போஸ் மைதானம், அண்ணா பெயரில் அங்காடி, நேரு கலையரங்கம் என்று வணிக வளாகம் இருந்தது. தற்போது அந்தப் பெயரை மாற்றி கருணாநிதி பெயரை வைப்பது கண்டிக்கத்தக்கது. போஸ் மைதான பகுதியில் பூ மற்றும் காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. ஏழை, எளிய மக்கள் வியாபாரம் செய்து வருகின்றனர் முதல்வர் வருகையை ஒட்டி அங்கு வியாபாரம் செய்து கொண்டிருந்த பூ மற்றும் காய்கறி வியாபாரிகளை அதிகாரிகளை வைத்து மாற்று இடம் வழங்காமல் அப்புறப்படுத்தியது கண்டிக்கத்தக்கது என்றார்.

இதனிடையே மத்திய அரசின் உதவியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட ஈரடுக்கு பேருந்து நிலையத்துக்கு கருணாநிதியின் பெயர் வைப்பது குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories