வீட்டுக்கு வாங்கி வந்த ஹோட்டல் சாப்பாடில் பிளேடுத் துண்டு! மதுரையில் பரபரப்பு!

Published:

IMG 20230618 WA0031 - 2026
#image_title

மதுரையில் உணவகம் ஒன்றில் வாடிக்கையாளருக்கு கொடுக்கப்பட்ட உணவில் பிளேடு துண்டு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை சோலையழகுபுரம் பகுதியை சேர்ந்த முகமது. இவரது மனைவி , மதிய உணவு சாப்பிடுவதற்காக ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில், சாப்பாடு பார்சல் ஒன்றை வாங்கி சென்றுள்ளார்.

இந்த நிலையில், வீட்டில், சாப்பாடு பார்சலை பிரித்து பார்த்த போது, வெள்ளை சாதத்தில் பாதி உடைந்த பிளேடு துண்டு ஒன்று கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு நேரில் சென்று கடையில் வேலை பார்த்த ஊழியர் ஞானம் என்பவரிடம் கேட்ட போது அவர் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், முகமது உணவுப் பாதுகாப்புத் துறைக்கு கொடுத்த புகாரின் பேரில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் முகமது மனைவி ஆர்டர் செய்த உணவை சோதனை செய்ததோடு, உணவகத்தில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, வெள்ளை சாதம் எதுவும் அங்கு வைக்கப்படாமல் இருந்துள்ளது. மேலும், பணியாளர்களிடம் மருத்துவசான்று, தலையுறை அணியாமல் உணவுகளை சமைத்து வந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, வாடிக்கையாளரிடம் தவறு இருந்தால் திருத்திக் கொள்வதாக கடிதம் ஒன்றையும் உணவகம் எழுதிக் கொடுத்துள்ளது.

ALSO READ:  ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிவகாசியில் காலண்டர் ஆல்பம் வெளியீடு!

மேலும், உணவுப் பாதுகாப்புத்துறை சுட்டிக்காட்டிய புகார்கள் குறித்து, உணவகத்திற்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டு விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. மதுரையில் மதிய உணவிற்கு ஆர்டர் செய்த உணவில் பிளேடு துண்டு கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related articles

Recent articles

spot_img