மு.க.ஸ்டாலினின் 63–வது பிறந்த நாள்: கருணாநிதி முத்தம் கொடுத்து ஆசி

Karunanidhi attends a meeting besides his son Stalin at party headquarters in Chennaiசென்னை: தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது 63–வது பிறந்த நாள் விழாவை இன்று கொண்டாடினார். இதையொட்டி அதிகாலை 6 மணி அளவில் அவர் தனது மனைவியுடன் கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் தனது தந்தையும், தி.மு.க. தலைவருமான கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்றார். ஸ்டாலினை கட்டித் தழுவி முத்தமிட்டு கருணாநிதி வாழ்த்தினார். பின்னர் குடும்பத்தினருடன் சேர்ந்து, மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் கேக் வெட்டினார். மெரினாவில் உள்ள அண்ணா சமாதியில் மலர் வளையம் வைத்தும், வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மாலை அணிவித்தும் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். காலை 8.30 மணி அளவில் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தொண்டர்களை சந்தித்தார். இதற்காக அங்கு அலங்கார மேடை அமைக்கப்பட்டிருந்தது. மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவிக்க மைதானத்தில் ஏராளமான தொண்டர்கள் குவிந்திருந்தனர். ஸ்டாலின் வந்ததும் அவர்கள் வரிசையாக சென்று அவருக்கு மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். சிலர் பழங்கள், சீர்வரிசை தட்டுகள், ரூபாய் நோட்டு மாலை என அணிவித்து ஸ்டாலினை வாழ்த்தினர். தனக்கு வாழ்த்து தெரிவித்த மூத்த நிர்வாகிகளை ஸ்டாலின் பக்கத்தில் அழைத்து நிறுத்தி புகைப்படம் எடுத்து கொண்டார். மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார். த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், முன்னாள் அமைச்சர் பொன்முடி, ஏ.வ.வேலு, சுரேஷ்ராஜன், ஐ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர், ராமச்சந்திரன், கே.என்.நேரு, முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியம், நிர்வாகிகள் கே.கே.நகர் தனசேகரன், முத்துவேல், மாவட்ட பிரதிநிதி கொடுங்கையூர் அன்பழகன், பல்லாவரம் நகர செயலாளர் இ.கருணாநிதி, பெருங்குடி ரவிச்சந்திரன், சேப்பாக்கம் பகுதி துணை செயலாளர் சிதம்பரம், பாண்டிபஜார் பாபாசுரேஷ், மேட்டுக்குப்பம் கமலக்கண்ணன், முத்துராமன், திருச்சி தொழில் அதிபர் ஜான்சன் குமார் உள்பட பலர் அவரை நேரில் வாழ்த்தினார்கள்.

ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories