எம்.ஆர்.எஃப். தொழிலாளர்களின்  சிக்கலை அரசு தீர்க்க வேண்டும்: ராமதாஸ்

எம்.ஆர்.எஃப். தொழிலாளர்களின் சிக்கலைத் தீர்க்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் கேட்டுக்  கொண்டுள்ளார். 
இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:
சென்னை திருவொற்றியூரில் உள்ள எம்.ஆர்.எஃப். தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் தங்களுடன் புதிய ஊதிய ஒப்பந்தத்தில் ஆலை நிர்வாகம் கையெழுத்திட வேண்டும், தொழிலாளர்களை பழிவாங்கும் போக்கை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
எம்.ஆர்.எஃப். தொழிற்சாலை நிர்வாகத்திற்கும், தொழிற்சங்கத்திற்கும் இடையிலான ஊதிய ஒப்பந்தம்  ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே காலாவதியாகிவிட்டது. அதற்கு பதிலாக, புதிய ஊதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டிய ஆலை நிர்வாகம், இல்லாத காரணங்களைக் கூறி தட்டிக் கழித்து வருகிறது. இதுதொடர்பாக இருதரப்புக்கும் இடையே நடைபெற்ற பேச்சுக்களின் போது, தொழிற்சாலையின் இரு முக்கியத் துறைகளின் அனைத்துப் பணிகளையும் கவனித்துக் கொள்ளும் உரிமையை வேறு ஒரு நிறுவனத்திடம் ஒப்படைக்கப் போவதாகவும், அதை தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொண்டால் தான்  புதிய ஊதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியும் என்றும் நிர்வாகம் கூறிவிட்டதால் அதை எதிர்த்து தொழிலாளர் நல நீதிமன்றத்தில் தொழிற்சங்கங்கள் வழக்குத் தொடர்ந்தன. இந்த வழக்கு முடிந்தால், புதிய ஊதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டியிருக்கும் என்பதால், இந்த வழக்கை முடிவடையாமல் இழுத்தடிக்கும் பணியில் ஆலை நிர்வாகம் ஈடுபட்டிருக்கிறது. இதை எதிர்த்து குரல் கொடுக்கும் தொழிலாளர்களுக்கு ஊதியத்தைக் குறைப்பது, தற்காலிக பணி நீக்கம் செய்வது, நிரந்தர பணி நீக்கம் செய்வது உள்ளிட்ட பழிவாங்கும் நடவடிக்கைகளை ஆலை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
தொழிலாளர்களுக்கு எதிரான ஆலை நிர்வாகத்தின் இந்த போக்கு கடுமையாக கண்டிக்கத்தக்கது. ஆலை நிர்வாகத்தின் இந்த செயல்பாடுகளைக் கண்டித்து தொழிற்சங்க நிர்வாகிகளான வெங்கடேசன், விஜயகுமார் ஆகிய இருவரும் கடந்த 02.02.2015 முதல் தொழிற்சாலை வளாகத்துக்கு அருகில் தொடர் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இதேகோரிக்கைகளை வலியுறுத்தி  அனைத்துத் தொழிலாளர்களும் கடந்த 21.02.2015 அன்று சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் அறப்போராட்டம் நடத்தினார்கள். இவர்களின் போராட்டத்திற்கு வட சென்னையில் செயல்படும் அனைத்து  தொழிற்சாலைகளிலும் பணியாற்றும் தொழிலாளர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இவ்வளவுக்குப் பிறகும் தொழிலாளர்களின் கோரிக்கை தொடர்பாக அவர்களுடன் பேச்சு நடத்த ஆலை நிர்வாகம் மறுத்து வருகிறது. எம்.ஆர்.எஃப். தொழிற்சாலையில் மொத்தம் 1100 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதற்காக ஆண்டுக்கு ஓரிரு கோடிகள் மட்டுமே செலவாகும். ஆனால், ஆண்டுக்கு ரூ.1000 கோடிக்கும் அதிகமாக லாபம் ஈட்டி, அதில் ரூ.500 கோடியை உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான விளம்பரதாரர் கட்டணமாக வழங்கியுள்ள எம்.ஆர்.எஃப். நிர்வாகம் தொழிலாளர்களுக்கு உரிமைகளை வழங்க மறுப்பது கண்டிக்கத்தக்கது. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.10 ஆயிரம் முதலீட்டில் பலூன் தொழிற்சாலையாக தொடங்கப்பட்ட எம்.ஆர்.எஃப். நிர்வாகம், இப்போது ஆண்டுக்கு ரூ.15,000 கோடி வருவாய் ஈட்டும் அளவுக்கு வளர்ந்திருப்பதற்குக் காரணம் அதன் தொழிலாளர்கள் தான் என்பதை மறந்து விட்டு, அவர்களை கொத்தடிமைகளைப் போல நடத்துவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.
இந்தப் பிரச்சினையில் தலையிட்டு தீர்வு காண வேண்டிய தமிழக அரசு, வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது சரியல்ல. 2008 ஆம் ஆண்டு இதேபோன்ற சிக்கல் ஏற்பட்ட போது தொழிலாளர்களை பழிவாங்கும் நோக்கத்துடன் கதவடைப்புச் செய்வதாக ஆலை நிர்வாகம் அறிவித்தது. இதையடுத்து அப்பிரச்சினையில் தலையிட்ட தமிழக அரசு, ஒரு வாரத்திற்குள் கதவடைப்பை நீக்காவிட்டால்,  ஆலையை அரசே ஏற்று நடத்தும் என எச்சரித்தது. அதன்பிறகே எம்.ஆர்.எஃப். நிர்வாகம் பணிந்தது. அதேபோல், இப்போதும் இப்பிரச்சினையில் தலையிட்டு எம்.ஆர்.எஃப். ஆலை நிர்வாகத்தையும், தொழிற்சங்கங்களையும் அழைத்துப் பேசி சிக்கலுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories