December 6, 2025, 4:11 AM
24.9 C
Chennai

சாலையோரத்தில் மனைவிக்கு பிரசவம் பார்த்த பார்வையற்ற கணவன்

மணப்பாறையில் சாலையோரத்தில் மனைவிக்கு பார்வையற்ற கணவன் பிரசவம் பார்த்தார். அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

சிவகங்கை பாலமுனி நகர் பகுதியை சேர்ந்தவர் அப்பாஸ். பார்வையற்றவர். இவரது மனைவி பரிதா (வயது 30). இந்த தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இவர்கள் தர்மம் வாங்கி பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பரிதா மீண்டும் கர்ப்பமானார். அவருக்கு பிரசவ வலி ஏற்படவே மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். உடன் அவரது கணவர் அப்பாஸ் சென்றார். ஆனால் பரிதாவை திருச்சி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு செல்லும்படி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.

தங்களிடம் பணம் இல்லாததால், மணப்பாறையிலே பிரசவம் பார்க்க கூறினர். ஆனால் மருத்துவர்கள் மறுத்துவிட்டதால் பின்னர் அவர்கள் மணப்பாறை ரெயில் நிலையம் அமைந்துள்ள சாலையில் ஒரு ஆஞ்சநேயர் கோவிலின் அருகே சென்று நேற்று காலை தங்கி விட்டனர்.

அங்கு சென்ற சிறிது நேரத்தில் பிரசவ வலி அதிகரிக்கவே மண் தரையில் படுத்து பரிதா துடித்தார். இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் வேனிற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் 108 ஆம்புலன்ஸ் வேன் டிரைவர் லோகேஷ், அவசர கால மருத்துவ நிபுணர் பாஸ்கரன் ஆகியோர் ஆம்புலன்சுடன் விரைந்தனர். இருப்பினும் பரிதா பிரசவ வலியால் அலறினார். கணவர் அப்பாஸ் தனது மனைவியை ஆசுவாசப்படுத்தினார். குழந்தை பிறந்து கொண்டிருப்பதை பார்வையற்ற தனது கணவன் அப்பாசிடம் பரிதா தெரிவித்தார்.

அவர் செய்வதறியாமல் குழந்தை பிறந்து வெளியே வரும் போது கையில் தாங்கி பிடித்துக்கொண்டார். அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. சாலையோரத்தில் மனைவிக்கு பார்வையற்ற கணவர் பிரசவம் பார்த்ததை கண்ட அப்பகுதியினரின் கண்களில் கண்ணீர் வந்தது. அவர்களது நிலையை கண்டு உருகினர். இதற்கிடையில் 108 ஆம்புலன்ஸ் வேன் வந்து சேர்ந்தது. அவசர கால மருத்துவ நிபுணர் பாஸ்கரன் சிகிச்சை அளித்து குழந்தையை முழுவதுமாக வெளியில் எடுத்தார். இதைத்தொடர்ந்து தாயும், சேயும் பத்திரமாக மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மணப்பாறை அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக இருந்தாலும், கர்ப்பிணி பெண்களை மேல் சிகிச்சைக்கு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பது வாடிக்கையாக உள்ளது. இதில் தான் நேற்று பரிதா சாலையோரம் பிள்ளை பெற்றெடுக்க தள்ளப்பட்டார். உரிய சிகிச்சை வசதி இருந்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. எந்த பெண்ணுக்கும் இனி இது போன்ற நிலை வரக்கூடாது. அதற்கு கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சையை மணப்பாறை அரசு மருத்துவமனையில் மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜெ.டி.ஆர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories