சாலையோரத்தில் மனைவிக்கு பிரசவம் பார்த்த பார்வையற்ற கணவன்

மணப்பாறையில் சாலையோரத்தில் மனைவிக்கு பார்வையற்ற கணவன் பிரசவம் பார்த்தார். அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

சிவகங்கை பாலமுனி நகர் பகுதியை சேர்ந்தவர் அப்பாஸ். பார்வையற்றவர். இவரது மனைவி பரிதா (வயது 30). இந்த தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இவர்கள் தர்மம் வாங்கி பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பரிதா மீண்டும் கர்ப்பமானார். அவருக்கு பிரசவ வலி ஏற்படவே மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். உடன் அவரது கணவர் அப்பாஸ் சென்றார். ஆனால் பரிதாவை திருச்சி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு செல்லும்படி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.

தங்களிடம் பணம் இல்லாததால், மணப்பாறையிலே பிரசவம் பார்க்க கூறினர். ஆனால் மருத்துவர்கள் மறுத்துவிட்டதால் பின்னர் அவர்கள் மணப்பாறை ரெயில் நிலையம் அமைந்துள்ள சாலையில் ஒரு ஆஞ்சநேயர் கோவிலின் அருகே சென்று நேற்று காலை தங்கி விட்டனர்.

அங்கு சென்ற சிறிது நேரத்தில் பிரசவ வலி அதிகரிக்கவே மண் தரையில் படுத்து பரிதா துடித்தார். இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் வேனிற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் 108 ஆம்புலன்ஸ் வேன் டிரைவர் லோகேஷ், அவசர கால மருத்துவ நிபுணர் பாஸ்கரன் ஆகியோர் ஆம்புலன்சுடன் விரைந்தனர். இருப்பினும் பரிதா பிரசவ வலியால் அலறினார். கணவர் அப்பாஸ் தனது மனைவியை ஆசுவாசப்படுத்தினார். குழந்தை பிறந்து கொண்டிருப்பதை பார்வையற்ற தனது கணவன் அப்பாசிடம் பரிதா தெரிவித்தார்.

அவர் செய்வதறியாமல் குழந்தை பிறந்து வெளியே வரும் போது கையில் தாங்கி பிடித்துக்கொண்டார். அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. சாலையோரத்தில் மனைவிக்கு பார்வையற்ற கணவர் பிரசவம் பார்த்ததை கண்ட அப்பகுதியினரின் கண்களில் கண்ணீர் வந்தது. அவர்களது நிலையை கண்டு உருகினர். இதற்கிடையில் 108 ஆம்புலன்ஸ் வேன் வந்து சேர்ந்தது. அவசர கால மருத்துவ நிபுணர் பாஸ்கரன் சிகிச்சை அளித்து குழந்தையை முழுவதுமாக வெளியில் எடுத்தார். இதைத்தொடர்ந்து தாயும், சேயும் பத்திரமாக மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மணப்பாறை அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக இருந்தாலும், கர்ப்பிணி பெண்களை மேல் சிகிச்சைக்கு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பது வாடிக்கையாக உள்ளது. இதில் தான் நேற்று பரிதா சாலையோரம் பிள்ளை பெற்றெடுக்க தள்ளப்பட்டார். உரிய சிகிச்சை வசதி இருந்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. எந்த பெண்ணுக்கும் இனி இது போன்ற நிலை வரக்கூடாது. அதற்கு கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சையை மணப்பாறை அரசு மருத்துவமனையில் மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜெ.டி.ஆர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories