ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் செப்பு தேரோட்டம்..

TN 20230628100409121429 - 2026

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் வளாகத்தில் உள்ள பெரியாழ்வார் சன்னதியில் ஆனி ஸ்வாதி விழாவில் முக்கிய நிகழ்வாக செப்பு தேரோட்டம் இன்று  நடைபெற்றது.திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் வளாகத்தில் உள்ள பெரியாழ்வார் சன்னதியில் ஆனி ஸ்வாதி திருவிழா உற்சவம் கடந்த 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் பல்வேறு மண்டபங்களில், பல்வேறு வாகனங்களில் பெரியாழ்வார் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி, வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது.

IMG 20230628 WA0021 1 - 2026

விழாவின் முக்கிய நிகழ்வாக செப்பு தேரோட்டம் இன்று  நடைபெற்றது. இதற்காக சுவாமி பெரியாழ்வார் கோவிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க செப்பு தேருக்கு எழுந்தருளினார். தொடர்ந்து தேரோட்டம் நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வார் திரு ஆனி சுவாதி உற்ஸவ செப்பு தேரோட்டம் இன்று காலை 7:00 மணிக்கு கோயிலில் இருந்து புறப்பட்டு செப்பு தேருக்கு பெரியாழ்வார் எழுந்தருளினார்.

அங்கு சிறப்பு பூஜைகளை அனிரூத் பட்டர் செய்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் 7:15 மணிக்கு பக்தர்களின் கோவிந்தா, கோபாலா கோசத்திற்கு மத்தியில் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. கோயில் யானை ஜெயமால்யதா முன்செல்ல, நான்கு ரத வீதி சுற்றி வந்து சுமார் ஒரு மணி நேரத்தில் தேர் நிலையம் அடைந்தது. விழாவில் தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் முத்துராஜா, வேதபிரான் சுதர்சன், ஸ்தானிகம் கிருஷ்ணன், ரமேஷ், மணியம் கோபி மற்றும் கோயில் பட்டர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர். டவுண் இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பெரியாழ்வார் அவதரித்த ஆனி சுவாதி திருநாளான நாளை சாற்றுமுறை நடைபெறுகிறது.
இதே செப்புத் தேரோட்டம் பங்குனி மாதத்திலும் நடைபெறும். ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் நாச்சியார் – சுவாமி ரெங்கமன்னார் திருக்கல்யாணம் பங்குனி உத்திரம் நட்சத்திரத்தில்தான் நடைபெற்றது. இந்நாளில் இருவரும் காலையில் செப்புத்தேரில் வலம் வந்து, இரவில் திருக்கல்யாணம் நடைபெறுவது வழக்கம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories