Homeவீடியோசெங்கோட்டையில் பொதிகை டீசல் எஞ்சினுக்கு பிரியாவிடை!

செங்கோட்டையில் பொதிகை டீசல் எஞ்சினுக்கு பிரியாவிடை!

-

நவ.1ம் தேதி, நாளை முதல், பொதிகை, சிலம்பு, மயிலாடுதுறை விரைவு ரயில்கள், முழுமையாக, செங்கோட்டை முதல், மின்சார இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது.

அக்.31ம் தேதி, செவ்வாய்க்கிழமை, இன்று, பொதிகை அதிவிரைவு ரயில், டீசல் எஞ்சின் மூலம் இயக்கப்படுவது, இன்றே கடைசி நாள் என்பதால், டீசல் எஞ்சினுக்கு பிரியாவிடை கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதை முன்னிட்டு, செங்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் சார்பில், கே எச் கிருஷ்ணன், சுந்தரம், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு, இஞ்சின் லோகோ பைலட்களுக்கு சால்வை அணிவித்து, கேக்கு, இனிப்புகள் வழங்கி, பாராட்டி, வழியனுப்பி வைத்தார்கள்.

நவ.1ம் தேதி நாளை முதல், பொதிகை, சிலம்பு மற்றும், மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில்கள், இடையில், என்ஜின் மாற்றம் ஏதுமின்றி, மின்சார என்ஜின் மூலமாக இயக்கப்பட உள்ளன.

அடுத்த வாரம் நெல்லை – மேட்டுப்பாளையம், மற்றும், செங்கோட்டை -மதுரை வண்டிகளும், மின்சார என்ஜின் மூலமாக, இயக்கப்பட உள்ளன.

கேரளப் பகுதிகளில், மின்சார இணைப்புப் பணிகள் இன்னும் முடிவடையாததால், கொல்லம், சென்னை, கொல்லம், மதுரை, குருவாயூர் மதுரை ரயில்கள், வழக்கம் போல மதுரை வரை, டீசல் எஞ்ஜின் மூலமாக இயக்கப்படும். எர்ணாகுளம், வேளாங்கண்ணி, எர்ணாகுளம் ரயில், வழக்கம் போல் இயங்கும். இதற்கான அறிவிப்பை தென்னக ரயில்வே வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், அக்.31ம் தேதி, இன்று முதல், சென்னை எழும்பூர் – செங்கோட்டை, பொதிகை எக்ஸ்பிரஸ், மின்சார எஞ்சினில் இயக்கப்படுகிறது.

நவ.1ம் தேதி நாளை முதல், செங்கோட்டை – சென்னை எழும்பூர் செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ், மின்சார எஞ்சினில் முழுவதுமாக இயக்கப்படுகிறது.

இதுவரை, மதுரையில், டீஸல் எஞ்சின் மாற்றப்பட்டு வந்தது. அந்த நேரம் இனி மிச்சமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.