உஷார்; அந்நிய நிறுவனங்களின் சதிவலை!

mumbai stock exchange
#image_title

தெகிடி என்றொரு படம். காப்பீடு செய்தவர்கள் சரியாக நாமினி பெயரை தராததால் அவர்களை கொன்று, அந்த பணத்தை ஒரு கூட்டம் தனாதாக்கிக்கொள்ளும். அருமையாக இருக்கும்.

கீழே உள்ள செய்திதான் பங்குச்சந்தையில் நடக்கும் வெள்ளை காலர் சூதாட்டம், சதிகள் இத்யாதி. எந்தெந்த வங்கிகள் எந்தெந்த நிறுவனங்களில் முதலீடு செய்யும், செய்கின்றன என்பதை அறிவுறுத்துகிறவர்கள் அந்நிய நாட்டு நிறுவனங்களுக்கு சொல்வார்கள். இவர்கள் அந்தந்த நிறுவனங்களில் குறைவான விலைக்கு முதலீடு செய்து வைப்பார்கள். வங்கிகள் முதலீடு செய்யத்தொடங்கும்போது இதன் விலை ஏறத்துவங்கும். ஒரு கட்டத்தில் நல்ல லாபத்துடன் சட்டென்று பின் வாங்கிவிடுவார்கள் அந்நியர்கள். உள்ளூர் ஆட்களுக்கு இந்த சாமர்த்தியம் இல்லை. இதே வேலையை அவர்கள் உள்ளூரிலேயே செய்யலாமே!

இங்கு கொள்ளையடித்து வெளிநாடுகளில் முதலீடு செய்தவர்கள், அந்தந்த நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகத்தை தொடர்பு கொண்டு இந்தியாவிடம் பங்குச்சந்தையில் அந்நிய முதலீடு பற்றி பேசுங்கள் என்றார்கள். எல்லாரும் அனுமதி தந்தார்கள். இப்போது 20000 கோடியுடன் வெளியேறுகிறார்கள் என்று செய்தி. எவ்வளவு அடித்தார்கள், எவ்வளவு முதலீடு செய்தார்கள் என்று யாருக்கு தெரியும்?

இன்று வெளியான செய்தியைப் படியுங்கள். நாம் சொல்வது என்னவென்று புரியும்…


நடப்பு அக்டோபர் மாதத்தில், அன்னிய முதலீட்டாளர்கள், இந்திய சந்தைகளிலிருந்து 20,300 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்று, வெளியேறியுள்ளனர். எனினும், இந்திய கடன் பத்திரங்களில் 6,080 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர்.

இது குறித்து, சந்தை ஆய்வாளர்கள் கூறியதாவது: அன்னிய முதலீட்டாளர்கள் நடப்பு அக்டோபர் மாதத்தில், கடந்த 27ம் தேதி வரையிலான காலத்தில், 20,356 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்றுள்ளனர். இம்மாதம் முடிவடையும் போது இத்தொகை மேலும் அதிகரிக்கும்.

அமெரிக்க கடன் பத்திரங்களின் வருவாய் அதிகரிப்பும், இஸ்ரேல் போர் காரணமாக நிலவும் அசாதாரணமான சூழலும் தான் இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

எனினும், இதே காலகட்டத்தில், இந்திய கடன் பத்திரங்களில் 6,080 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வரும் நவம்பர் 1ம் தேதி, அமெரிக்க பெடரல் வங்கியின் பணக்கொள்கை கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தின் முடிவுகள் மற்றும் பிற உலக பொருளாதார முன்னேற்றங்களை பொறுத்தே, இனி வரும் காலங்களில், அன்னிய முதலீட்டாளர்களின் முதலீடுகள் அமையும்.

தற்போதைய சூழலில் தங்கம், அமெரிக்க டாலர் போன்ற பாதுகாப்பான முதலீடுகளிலேயே அன்னிய முதலீட்டாளர்கள் அதிகம் கவனம் செலுத்துவர். இந்திய கடன் பத்திரங்கள் நல்ல வருவாயை ஈட்டி தருவதாலும், இந்திய பொருளாதாரம் மற்றும் ரூபாயின் மதிப்பு நிலையாக உள்ளதாலும், இந்திய கடன் பத்திரங்களில் தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்திய கடன் பத்திரங்கள் நல்ல வருவாயை ஈட்டி தருவதால் அன்னிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து அதில் முதலீடு செய்து வருகின்றனர்.

— ஆனந்த் வெங்கட்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories