உஷார்; அந்நிய நிறுவனங்களின் சதிவலை!

mumbai stock exchange
#image_title

தெகிடி என்றொரு படம். காப்பீடு செய்தவர்கள் சரியாக நாமினி பெயரை தராததால் அவர்களை கொன்று, அந்த பணத்தை ஒரு கூட்டம் தனாதாக்கிக்கொள்ளும். அருமையாக இருக்கும்.

கீழே உள்ள செய்திதான் பங்குச்சந்தையில் நடக்கும் வெள்ளை காலர் சூதாட்டம், சதிகள் இத்யாதி. எந்தெந்த வங்கிகள் எந்தெந்த நிறுவனங்களில் முதலீடு செய்யும், செய்கின்றன என்பதை அறிவுறுத்துகிறவர்கள் அந்நிய நாட்டு நிறுவனங்களுக்கு சொல்வார்கள். இவர்கள் அந்தந்த நிறுவனங்களில் குறைவான விலைக்கு முதலீடு செய்து வைப்பார்கள். வங்கிகள் முதலீடு செய்யத்தொடங்கும்போது இதன் விலை ஏறத்துவங்கும். ஒரு கட்டத்தில் நல்ல லாபத்துடன் சட்டென்று பின் வாங்கிவிடுவார்கள் அந்நியர்கள். உள்ளூர் ஆட்களுக்கு இந்த சாமர்த்தியம் இல்லை. இதே வேலையை அவர்கள் உள்ளூரிலேயே செய்யலாமே!

இங்கு கொள்ளையடித்து வெளிநாடுகளில் முதலீடு செய்தவர்கள், அந்தந்த நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகத்தை தொடர்பு கொண்டு இந்தியாவிடம் பங்குச்சந்தையில் அந்நிய முதலீடு பற்றி பேசுங்கள் என்றார்கள். எல்லாரும் அனுமதி தந்தார்கள். இப்போது 20000 கோடியுடன் வெளியேறுகிறார்கள் என்று செய்தி. எவ்வளவு அடித்தார்கள், எவ்வளவு முதலீடு செய்தார்கள் என்று யாருக்கு தெரியும்?

ALSO READ:  ஐபிஎல் 2026: அதிரடி ரன் குவிப்பின் ஆட்டக்களமானது!

இன்று வெளியான செய்தியைப் படியுங்கள். நாம் சொல்வது என்னவென்று புரியும்…


நடப்பு அக்டோபர் மாதத்தில், அன்னிய முதலீட்டாளர்கள், இந்திய சந்தைகளிலிருந்து 20,300 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்று, வெளியேறியுள்ளனர். எனினும், இந்திய கடன் பத்திரங்களில் 6,080 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர்.

இது குறித்து, சந்தை ஆய்வாளர்கள் கூறியதாவது: அன்னிய முதலீட்டாளர்கள் நடப்பு அக்டோபர் மாதத்தில், கடந்த 27ம் தேதி வரையிலான காலத்தில், 20,356 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்றுள்ளனர். இம்மாதம் முடிவடையும் போது இத்தொகை மேலும் அதிகரிக்கும்.

அமெரிக்க கடன் பத்திரங்களின் வருவாய் அதிகரிப்பும், இஸ்ரேல் போர் காரணமாக நிலவும் அசாதாரணமான சூழலும் தான் இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

எனினும், இதே காலகட்டத்தில், இந்திய கடன் பத்திரங்களில் 6,080 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வரும் நவம்பர் 1ம் தேதி, அமெரிக்க பெடரல் வங்கியின் பணக்கொள்கை கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தின் முடிவுகள் மற்றும் பிற உலக பொருளாதார முன்னேற்றங்களை பொறுத்தே, இனி வரும் காலங்களில், அன்னிய முதலீட்டாளர்களின் முதலீடுகள் அமையும்.

ALSO READ:  தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தற்போதைய சூழலில் தங்கம், அமெரிக்க டாலர் போன்ற பாதுகாப்பான முதலீடுகளிலேயே அன்னிய முதலீட்டாளர்கள் அதிகம் கவனம் செலுத்துவர். இந்திய கடன் பத்திரங்கள் நல்ல வருவாயை ஈட்டி தருவதாலும், இந்திய பொருளாதாரம் மற்றும் ரூபாயின் மதிப்பு நிலையாக உள்ளதாலும், இந்திய கடன் பத்திரங்களில் தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்திய கடன் பத்திரங்கள் நல்ல வருவாயை ஈட்டி தருவதால் அன்னிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து அதில் முதலீடு செய்து வருகின்றனர்.

— ஆனந்த் வெங்கட்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories