நிரவ் மோடியில் அமெரிக்க வைர நிறுவனம் திவாலானதாக அறிவிப்பு!

புது தில்லி:

பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் ரூ.12 ஆயிரம் கோடி அளவில் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள வைரத் தொழிலதிபர் நிரவ் மோடியின் அமெரிக்க நிறுவனம் ஃபயர்ஸ்டார் டைமண்ட், திவால் ஆனதாக அறிவித்துள்ளது.

இந்தியாவில் வைரத் தொழிலில் ஈடுபட்டு தொழிலதிபராக வலம் வந்தவர் நிரவ் மோடி. இவரது நிறுவனம்,  பஞ்சாப் நேஷனல் வங்கியின் அதிகாரிகளை பயன்படுத்தி, வெளிநாட்டு வங்கிகளுக்கு போலி வாக்குறுதிகளை கொடுத்து, சுமார் 11,300 கோடி ரூபாய் அளவில் கடன் வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்டது.

நிரவ் மோடி மற்றும் அவரது மாமா மெஹுல் சோக்சி இருவரும்  பஞ்சாப் நேஷனல் வங்கியின் முக்கிய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து இந்த மோசடியை நிகழ்த்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டது.

நிரவ் மோடி மீது வழக்கு பதிவு செய்து தேடுவதற்கு முன்னதாகவே, நிரவ் மோடி குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விட்டார். இந்நிலையில், இந்த வழக்கு குறித்து விசாரித்து வரும் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள், இந்தியாவில் உள்ள அவரது சொத்துக்களை முடக்கியுள்ளனர்.

இதனிடையே, அமெரிக்காவில் தனது ஃபயர்ஸ்டார் டைமண்ட் நிறுவனம் திவாலானதாக நிரவ் மோடி பதிவு செய்துள்ளார். சுமார் ரூ.325 கோடி மதிப்பிலான சொத்துக்களும், ரூ.650 கோடி மதிப்பிலான கடனும் இருப்பதாக நியூ யார்க் நீதிமன்றத்தில் அவரது தரப்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் இருந்து நிரவ் மோடி கரீபியன் தீவுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதாகவும், அங்கே தொழில் தொடங்கி நிரந்தரக் குடியுரிமை  பெறப் போவதாகவும் செய்திகள் வெளியாகியது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Entertainment News

Popular Categories