நிரவ் மோடியில் அமெரிக்க வைர நிறுவனம் திவாலானதாக அறிவிப்பு!

புது தில்லி:

பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் ரூ.12 ஆயிரம் கோடி அளவில் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள வைரத் தொழிலதிபர் நிரவ் மோடியின் அமெரிக்க நிறுவனம் ஃபயர்ஸ்டார் டைமண்ட், திவால் ஆனதாக அறிவித்துள்ளது.

இந்தியாவில் வைரத் தொழிலில் ஈடுபட்டு தொழிலதிபராக வலம் வந்தவர் நிரவ் மோடி. இவரது நிறுவனம்,  பஞ்சாப் நேஷனல் வங்கியின் அதிகாரிகளை பயன்படுத்தி, வெளிநாட்டு வங்கிகளுக்கு போலி வாக்குறுதிகளை கொடுத்து, சுமார் 11,300 கோடி ரூபாய் அளவில் கடன் வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்டது.

நிரவ் மோடி மற்றும் அவரது மாமா மெஹுல் சோக்சி இருவரும்  பஞ்சாப் நேஷனல் வங்கியின் முக்கிய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து இந்த மோசடியை நிகழ்த்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டது.

நிரவ் மோடி மீது வழக்கு பதிவு செய்து தேடுவதற்கு முன்னதாகவே, நிரவ் மோடி குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விட்டார். இந்நிலையில், இந்த வழக்கு குறித்து விசாரித்து வரும் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள், இந்தியாவில் உள்ள அவரது சொத்துக்களை முடக்கியுள்ளனர்.

இதனிடையே, அமெரிக்காவில் தனது ஃபயர்ஸ்டார் டைமண்ட் நிறுவனம் திவாலானதாக நிரவ் மோடி பதிவு செய்துள்ளார். சுமார் ரூ.325 கோடி மதிப்பிலான சொத்துக்களும், ரூ.650 கோடி மதிப்பிலான கடனும் இருப்பதாக நியூ யார்க் நீதிமன்றத்தில் அவரது தரப்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் இருந்து நிரவ் மோடி கரீபியன் தீவுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதாகவும், அங்கே தொழில் தொடங்கி நிரந்தரக் குடியுரிமை  பெறப் போவதாகவும் செய்திகள் வெளியாகியது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Entertainment News

Popular Categories