நெல்லை: புத்தகத் திருவிழாவா? திமுக., திக., கம்யூனிச பிரச்சாரக் கூட்டமா?

nellai book fair - 2026
#image_title

நெல்லை புத்தகத் திருவிழாவா ? திமுக திக கம்யூனிச பிரச்சாரக் கூட்டமா? என்று கேள்வி எழுப்பியுள்ள இந்து முன்னணி அமைப்பு, தனது கண்டனங்களைத் தெரிவித்துள்ளது. இந்து முன்னணி அமைப்பின் மாநில செயலாளர் கா.குற்றாலநாதன் இது குறித்துக் கூறுகையில்,

நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆண்டுதோறும் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கவும் பல்வேறு சிறந்த புத்தகங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்லவும் எழுத்தாளர்களுக்கு அங்கீகாரம் அளிக்கவும் புத்தகத் திருவிழா நடத்தப்படுகிறது.

ஆனால் 2024 நெல்லை புத்தகத் திருவிழா திமுக திக மற்றும் கம்யூனிஸ்டுகளின் பிரச்சார மாநாடு போல நடைபெற்று வருவது வேதனைக்குரியது. இதற்கெல்லாம் மேலாக இந்து மதத்திற்கு எதிராக வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பிரச்சாரங்கள் புத்தகத் திருவிழாவில் நடைபெற்று வருவது கண்டிக்கத்தக்கது.

நேற்று முன்தினம் நெல்லை புத்தகத்திருவிழாவில் பேசிய முன்னாள் நீதிபதி சந்துரு என்பவர், இந்து மதத்தை தரக்குறைவாகவும் சனாதன தர்மம் குறித்து பொய்யான செய்திகளையும் சொல்லி விமர்சித்து பேசியுள்ளார். இது போல வேற்று மதத்தில் உள்ள ஏற்றதாழ்வுகளை பேச சந்துரு பேசியிருந்தால் பெரிய பிரளயமே உருவாகியிருக்கும்.

ஒரு மதத்தை அதன் பாரம்பரியத்தை அரசு விழாவில் விமர்சித்துப் பேசுவதை மாவட்ட நிர்வாகம் எப்படி வேடிக்கை பார்கிறது என்பது ஆச்சரியமாக உள்ளது. புத்தகத் திருவிழா என்பது அனைத்து மக்களின் வரிப்பணத்தில் அரசு செலவில் நடத்தப்படும் விழா.

ALSO READ:  மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

திமுக., திக., கம்யூனிச பேச்சாளர்கள் பஞ்சம் பிழைக்கும் மேடையாக புத்தகத் திருவிழா மாறியது தமிழறிஞர்கள் மற்றும் பொது மக்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.

தமிழும் இந்து சமயமும் ஒன்றோடு ஒன்றி பின்னிப் பிணைந்தது. தமிழால் இந்து மதமும், இந்து மதத்தால் தமிழும் வளர்ந்தது என்பது மறுக்க இயலாத உண்மை. ஆனால் பக்தி இலங்கியங்கள் குறித்த எந்த சொற்பொழிவும் நிகழ்ச்சியும் 2024 நெல்லை புத்தக திருவிழாவில் இடம்பெறவில்லை என்பதிலிருந்தே புத்தக திருவிழாவில் ஆளும் அரசியல் ஆதிக்கத்தை உணர முடிகிறது.

கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சில நாட்களுக்கு சில மாதங்களுக்கு முன்பு விடுதலை செய்யப்பட்ட நபர் ஒருவர் புத்தகத்தில் திருவிழாவில் நன்றியுரை கூறும் அளவிற்கு புத்தக திருவிழா அரசியலாகி போனது வேதனை அளிக்கிறது.

இனி வரும் காலங்களிலாவது அரசியல் சார்பில்லாத, இந்து வெறுப்புணர்வை தூண்டாத பேச்சாளர்களை வைத்து புத்தகத் திருவிழாவை கண்ணியம் குறையாமல் நடத்திட மாவட்ட ஆட்சியருக்கு நெல்லை மாவட்ட இந்துக்கள் சார்பில் இந்துமுன்னணி கேட்டுகொள்கிறது, என்றார் கா.குற்றாலநாதன்.

ALSO READ:  ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories