திருக்கோயில் இடங்கள் கோயில் சார்ந்த பயன்பாட்டுக்கு மட்டுமே இருக்க வேண்டும்!

hindumunnani - 2026

திருக்கோவில் சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். கோவிலுக்கு சொந்தமான இடங்கள் கோவில் உபயோகத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம் என்று, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கையில் கேட்டுக் கொண்டிருக்கிறார். அவர் வெளியிட்ட அறிக்கை…

தமிழகத்தில் அறநிலையதுறை கட்டுபாட்டில் உள்ள கோயில்களின் நிதியில் இருந்து கல்லூரிகள் துவக்குவது மற்றும் கோயில் நிதியை தவறாக பயன்படுத்துவது போன்றவற்றை எதிர்த்து தாக்கல் செய்யபட்ட பொதுநல வழக்கு விசாரனையின்போது புதிதாக கல்லூரிகள் துவங்க தடை விதித்தும் ஏற்கனவே துவங்கி நடக்கும் கல்லூரிகள் வழக்கின் இறுதி உத்தரவுக்கு கட்டுபட்டது என்ற அடிப்படையில் தொடர்ந்து நடத்த அனுமதித்து மாண்புமிகு சென்னை உயர்நிதிமன்றம் உத்திரவிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

கோயில் நிலங்களில் அரசு நிதியை பயன்படுத்தி கல்லூரி கட்டபட்டிருந்தால் அத்தகைய நிலங்களை பயன்படுத்த நியாயமான வாடகை நிர்ணயம் செய்வது குறித்து அறநிலைய துறை மற்றும் மாநில அரசின் கருத்தை நிலைப்பாட்டை அறிவிக்குமாறும் உயர்நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

வழக்கு விசாரனையின்போது கல்வி நோக்கத்துக்காக அரசு கோயில் நிலங்களை வாடகைக்கு பெற்று கல்லூரி கட்டுவதால் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாப்படும் என்றும் கோயிலுக்கும் வருவாய் கிடைக்கும் என்றும் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. உயர்நீதிமன்றத்தின் நோக்கம் நல்லதாக இருந்தாலும் நடைமுறையில் மாறாக இருப்பதே கண்கூடு.

அந்த வகையில் இரண்டு வகையாக இந்த விஷயத்தை அணுகவேண்டும். கோயில் நிலத்தில் கோயில் நிதியில் கல்வி நிறுவனங்கள் அமைப்பது. கோயில் நிலத்தை வாடகைக்கு பெற்று அரசு செலவில் கல்வி நிறுவனம் அமைப்பது.

ALSO READ:  இஸ்ரேல் பதிலடி: எக்ஸ் கணக்கை டெலிட் செய்து ஓடிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்!

இதில் முதலாவதாக உள்ள கோயில் நிலத்தில் கோயில் நிதியில் கல்வி நிறுவன்ங்கள் அமைப்பதன் மூலம் இந்து பக்தர்களின் மூலம் கிடைக்கும் வருவாயில் நடத்தபடும் கல்லூரிகளில் பிற மதத்தினரும் பயன்பெறுகிறார்கள். ஆனால் பிற மதத்தினர் நடத்தும் கல்வி நிறுவனங்களில் அவர்கள் மத மாணவர்களுக்கு முன்னுரிமை கிடைப்பதை போல கோயில் நிதியில் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களில் இந்துமதத்தை சார்ந்த மாணவர்களுக்கு முன்னுரிமை கிடைப்பதில்லை

மேலும், அரசு நிர்வாகம் அல்லது அரசு கட்டுபாட்டில் உள்ள அறநிலையதுறையின் நிர்வாகம் என்ற அடிப்படையில் பிற மதத்தை சார்ந்த கல்லூரி முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்களை அந்த கல்வி நிறுவனங்களில் நியமிப்பதன் மூலம் அவர்கள் மத ரீதியாக பாரபட்சமாக செயல்படுவதும் சர்ச்சைகளும் ஏற்கனவே திருக்கோயில் நடத்தும் கல்வி நிறுவனங்களில் நடந்துள்ள நிலையில் கோயில் நிதியும் சொத்துகளும் பிற மதத்தினருக்கு மடைமாற்றம் ஆகும் என்ற வகையில் சிறிதும் ஏற்புடையதல்ல.

கல்வி அனைத்து தரப்புக்கும் கிடைக்க செய்வது அரசின் கடமை அதை ஒரு மத வழிபாட்டு தலங்களின் வருவாயை கொண்டு செய்வது பாரபட்சமானது என்பதுடன் அரசின் கடமையை கோயில் நிதியில் நிறைவேற்றுவது சிறிதும் ஏற்புடையதல்ல.

ALSO READ:  ஏபிவிபி., மாணவர்கள் மீது விசிக.,வினரின் கண்மூடித்தன தாக்குதலுக்கு கண்டனம்!

கோயில் நிலங்களை வாடகைக்கு பெற்று அரசு நிதியில் கல்வி நிறுவனங்கள் அமைப்பது கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யபடுவது தடுக்கும் என்று நல்ல நோக்கத்தில் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

ஆனால் அரசின் கல்வி துறையும் அறநிலைய துறையும் எந்தளவுக்கு நியாயமான வாடகை நிர்ணயிப்பார்கள் என்பதும் வாடகை உரிய முறையில் நிலுவை இல்லாமல் செலுத்துவார்கள் என்பதும் உறுதி செய்யமுடியாது, அரசு துறைகள் என்ற அடிப்படையில் வாடகை செலுத்தபடாவிட்டாலும் ஒரு நடவடிக்கையும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் எடுத்ததில்லை.

ஏற்கனவே பல அரசு அலுவலகங்கள் கோயில் நிலங்களை சொற்ப தொகைக்கு கையகபடுத்தி அமைக்கபட்டுள்ளது அதன் மூலம் கோயில் நிலங்களை அரசே பறித்துகொண்டதும் கோயிலுக்கு சொற்ப வருவாயே கிடைத்துள்ளதும் வரலாறு.

அரசுக்கு சொந்தமான ஏராளமான நிலங்கள் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள நிலையில் அவற்றை மீட்டு கல்வி நிலையங்களை அரசு நிலங்களிலேயே அரசு நிதியில் அமைக்கலாம்

கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க உயர்நீதிமன்றம் பல கடுமையான உத்தரவுகள் பிறபித்தும் அவற்றை இதுநாள் வரையிலும் மாநில அரசு முழுமையாக நிறைவேற்றவில்லை, ஏராளமான சொத்துகள் மீட்கபடாமல் இருக்கிறது.

எனவே கோயில் நிலங்களை ஆக்கிரமிப்புக்கு உள்ளாவதை தடுக்கவும் விரைவாக மீட்கவும் எளிதான சட்ட நடைமுறைகள் கொண்ட சிறப்பு சட்டங்கள் உருவாக்குவது இப்போதைய அவசிய, அவசர தேவையாகும்

ALSO READ:  சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

மாறாக கோயில் நிலங்களை வாடகைக்கு பெற்று அரசு செலவில் கல்லூரிகள் அமைப்பது கோயில் நிலங்களை அரசு அபகரிக்கவே ஏதுவாகும்.

ஏற்கனவே உயர்நீதிமன்றம் கோவில் இடங்களை கோவில் உபயோகத்தை தவிர மற்ற உபயோகத்திற்கு பயன்படுத்தக் கூடாது என்ற வழிகாட்டுதலை தந்துள்ளது. கல்லூரி துவக்குவது நடத்துவது மாநில அரசின் கடமை. அதனை கோவிலின் மீது சுமத்துவது ஏற்க முடியாது.

எனவே மாநில அரசும் அறநிலைய துறையும் கோயில் சொத்துகளின் பாதுகாப்பை பிரதானமாக கொண்டு சரியான முறையில் ஆலய சொத்துக்களை பாதுகாப்பது பராமரிக்க வேண்டிய தீர்வை நீதிமன்றத்துக்கு தெரிவிக்கவேண்டும். கோயில் சொத்துக்ளை பாதுகாப்பது மீட்பது குறித்து சிறப்பு சட்டங்களை உருவாகிட நீதிமன்றம் வழிகாட்ட வேண்டும் என்றும் இந்து முன்னணி பேரியக்கம் கேட்டுக் கொள்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories