12 ஆண்டுக்குப் பின் வந்த சங்கு; திருக்கழுக் குன்றத்தில் குவிந்த பக்தர்கள்!

thirukkazhukundram sangu - 2026

12 ஆண்டுகளுக்குப் பிறகு இயற்கையாக வரும் சங்கு தென்பட்டதை அடுத்து, அதை தரிசிக்க அன்பர்கள் ஏராளமானோர் திருக்கழுக்குன்றத்தில் குவிந்தனர்.

செங்கல்பட்டு அருகே உள்ள திருக்கழுக்குன்றம், அருள்மிகு திரிபுரசுந்தரி அம்பிகா ஸமேத ஸ்ரீ வேதகிரீஸ்வர ஸ்வாமி ஆலயத்தில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு தீர்த்தகரையில் இயற்கையான முறையில் தோன்றும் சங்கை கொண்டுதான் வேதாச்சலபதிக்கு சங்குகாபிஷேகம் நடத்துவார்கள்.

மகரிஷி மார்கண்டேயர் சிவாலயங்களுக்குச் சென்று தரிசனம் செய்துவிட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலுக்கு வந்தபோது, சிவ பெருமானை வழிபடுவதற்காக தீர்த்தம் எடுக்க பாத்திரம் இல்லாத நிலையில், இங்குள்ள குளத்தில் தீர்த்த பாத்திரம் வேண்டி பெருமானை வணங்கினார். அப்போது குளத்தில் இருந்து சங்கு ஒன்று பிறந்து கரை ஒதுங்கியது. அதை பெருமானே தனது வழிபாட்டுக்கு வழங்கியதாக எண்ணி மகரிஷியும் வழிபட்டார். இதனால் இந்தக் குளத்துக்கு சங்கு தீர்த்தக் குளம் என பெயர் ஏற்பட்டது.

இதுவரை மார்க்கண்டேயர் காலம் தொட்டு இந்த சங்கு பிறப்பெடுத்துக் கொண்டிருக்கிறது அவ்வகையில் கடந்த 2011 ஆம் ஆண்டு பிறப்பெடுத்த சங்கு 2024 ஆம் ஆண்டு பனிரெண்டு ஆண்டுகள் முடிய நேற்று சங்கு தீர்த்தகரையில் தென்பட்டுள்ளது. இந்த சங்கு சுத்தம் செய்யப்பட்டு பார்வையாளர்கள் தரிசனத்திற்கு வைக்கப்படும். பின்னர் பழைய சங்குகளுடன் இணைக்கப்பட்டு வேதாசலபதியின் பிரத்யேக சங்காபிஷேக விழாவில் பயன்படுத்தப்படும்

திருக்கழுக்குன்றத்தில் உள்ள வேதகிரீஸ்வரர் கோவில் மிகவும் புகழ்பெற்றது. இங்குள்ள சங்கு தீர்த்தக் குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு வெளியே வரும். இந்த சங்கு குளத்தில் கரை ஒதுங்கியதும், கோவில் நிர்வாகம் சார்பில் அதற்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். இதைத் தொடர்ந்து கார்த்திகை மாதத்தின் கடைசி திங்கட்கிழமையில் மலை மீது வேத கிரீஸ்வரருக்கு நடைபெறும் 1008 சங்காபிஷேகத்தில் குளத்தில் பிறந்த புதிய சங்கு முதன்மை பெறும். இதனைக் கண்டு வழிபட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள்.

ALSO READ:  மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

சங்கு தீர்த்தக் குளத்தில் கடந்த 2011ம் ஆண்டு செப்.1 அன்று, புதிய சங்கு வெளியே வந்தது. இதன் பின்னர் 12 வருடங்கள் காத்திருந்து, தற்போது சங்கு தீர்த்தக் குளத்தில் புதிய சங்கு வரும் என பக்தர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இந்த நிலையில் இன்று காலை குளத்தில் புதிய சங்கு கோவில் குளக்கரையில் ஒதுங்கியது. இதனைக் கண்ட பக்தர்கள் கோவில் நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். .

இந்நிலையில், புதிய சங்கு வெளியே வந்தது பற்றி அறிந்து, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஏராளமானோர் அதனைக் காணக் குவிந்தனர். சங்கைப் பார்த்து பக்தியுடன் வழிபட்டனர். பின்னர் அந்த சங்கிற்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதைத் தொடர்ந்து சங்கு பாதுகாப்பாக கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.

நாளை சிவராத்திரி விழா நடைபெற உள்ள நிலையில் இன்று சங்கு தீர்த்தக் குளத்தில் புதிய சங்கு வெளியே வந்ததால் பக்தர்கள் விசேஷமாக கூறி மகிழ்ச்சி அடைந்தனர். இதுவரை 8 சங்குகள் கோவிலில் இருப்பதாக நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மேகாலயா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.

Entertainment News

Popular Categories