காங்கிரஸின் ஏழ்மை.. ஏழ்மை… எனும் ஜபமாலை உருட்டல்!

pmmodi speech in meeting - 2026
#image_title

கரீபி ஹடாவோ எனும் ஏழ்மையை அகற்றுவோம்

தமிழில்: ராமஸ்வாமி சுதர்ஸன்

நீங்கள் செங்கோட்டையில் இந்தப் பிரதமர்கள் ஆற்றிய உரைகளைக் கேட்டீர்களென்றால், இந்தக் குடும்பத்தின் அனைத்து பிரதமர்களின் உரைகளைக் கேட்டீர்களென்றால்,  அவர்களின் 20-25 நிமிட உரைகளில் 10 நிமிடங்கள் வரை, கரீபி எனும் ஏழ்மை பற்றி பேசுவார்கள். எந்த ஒரு தேர்தல்காலப் பரப்புரையை வேண்டுமானாலும் கேளுங்கள், அவர்கள் ………. ஜபமாலையை உருட்டித் தீர்ப்பார்கள்.   

நேரு, 1951 – நாம் இரண்டாவது போராட்டத்தை நடத்த வேண்டும், அந்த உண்மையான போராட்டம், இந்தியாவின் ஏழ்மையோடு நாம் தொடுக்கும் போர்.  இந்தியாவின் வேலையில்லாத் திண்டாட்டத்தோடு போர்.

இந்திரா காந்தி, 1982 – தேசத்திலிருந்து ஏழ்மை அகல வேண்டும் என்பது தான் இன்று நமது குறிக்கோள்.   பிற்பட்டிருக்கும் பகுதிகளில் இருப்போர் பிற்பட்ட நிலையிலிருந்து உயர வேண்டும்.

இந்திரா காந்தி, 1984 – தன்னிறைவான, மற்றவர்களை விடச் சிறப்பான வாழ்க்கை வாழ்வோரின் தேவைகளை நிறைவேற்றும் அதே வேளையில், வாழ்க்கையில் பின் தங்கிப் போன, ஏழ்மையில் இருப்போரின், பலவீனமானவர்களின் தேவைகளுக்கும் அதே அளவு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

ராஜீவ் காந்தி, 1985 – பாரதநாட்டின் ஏழ்மையை நாம் அகற்றவில்லை என்று சொன்னால், நாம் செய்யத் திட்டமிடும் அனைத்துப் பணிகளும் வீணாகியே போகும்.  ஆகையால் நாம் ஏழ்மையை அகற்றும் பணியில் சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறோம்.

ராஜீவ் காந்தி, 1987 – ஏழ்மையை அகற்றுவதற்கு நாங்கள் முதன்மை அளித்திருக்கிறோம்.    ஏழ்மையை அகற்றுவதில் எங்களின் முழுச் சக்தியையும் நாங்கள் செலுத்தியிருக்கிறோம்.

மன்மோஹன் சிங், 2005 – நமது இந்த வேகத்தை நாம் தொடர்ந்து மேற்கொண்டோமேயானால், வரவிருக்கின்ற 5-10 ஆண்டுகளில் பாரதம் முழுவதிலிருந்தும் ஏழ்மை, பட்டினிச் சாவு, நோய்களிலிருந்து விடுபட முடியும்.

ராகுல் காந்தி, 2013 – பாதி ரொட்டியாவது உண்போம் என்ற உங்களுடைய கோஷத்தை நான் மாற்ற விரும்புகிறேன்.  முழு ரொட்டியை உண்போம், 6 நாட்கள் வேலை செய்வோம், மருந்துகளை எடுப்போம், காங்கிரஸ் கட்சியைக் கொண்டு வருவோம்.  

சோனியா காந்தி, 2014 – நம் மண்ணிலிருந்து ஏழ்மை என்ற சாபம் முடிவுக்குக் கொண்டு வரப்படாத வரை நம்மால் நிம்மதியாக உறங்க முடியாது.

ராகுல் காந்தி, 2019 – எங்களுடைய பணி, காங்கிரஸ் கட்சியின் பணி இந்தியாவைப் பாதுகாப்பது.   இந்தியாவின் ஏழைகளைப் பாதுகாப்பது.   பலவீனமானவர்களைப் பாதுகாப்பது.  

ராகுல் காந்தி, 2024 – ஒரே ஒரு அடியில், ஒரே ஒரு அடியில், இந்தியாவிலிருந்து ஏழ்மையை நாங்கள் அகற்றி விடுவோம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?

பெரிய படங்கள் இணையத்தில் கசிவது புதிய விஷயம் அல்ல. ஆனால், “ஜனநாயகன்” திரைப்படம் முழுமையாக லீக் ஆனதாக கூறப்படும் இந்தச் சம்பவம், வழக்கமான Piracy நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.

சமூகத்தை அச்சுறுத்தும் ‘டேட்டிங்’ செயலிகளை தடை செய்ய வேண்டும்!

தனிநபர் வாழ்க்கையும் சமூக அமைப்பும் பாதிக்கப்படும் பிரச்சினையாக இது மாறும் அபாயம் மறுக்க முடியாத ஒன்று; தனிநபர் விருப்பம் என்ற பெயரில் பரவும் சீரழிவுகள், சமூக அமைப்பையே சீர்குலைக்கும்

‘அருந்தமிழ் 50’ நூல் வெளியீடு

சாரல் ஆங்கில துணை இதழ் ஆசிரியர் ஜெயஸ்ரீ எம். சாரி எழுதிய கவிதை தொகுப்பான அருந்தமிழ் 50 என்ற நூலை திருவான்மியூரில் உள்ள இலக்கியச் சாரல்

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?

பெரிய படங்கள் இணையத்தில் கசிவது புதிய விஷயம் அல்ல. ஆனால், “ஜனநாயகன்” திரைப்படம் முழுமையாக லீக் ஆனதாக கூறப்படும் இந்தச் சம்பவம், வழக்கமான Piracy நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.

சமூகத்தை அச்சுறுத்தும் ‘டேட்டிங்’ செயலிகளை தடை செய்ய வேண்டும்!

தனிநபர் வாழ்க்கையும் சமூக அமைப்பும் பாதிக்கப்படும் பிரச்சினையாக இது மாறும் அபாயம் மறுக்க முடியாத ஒன்று; தனிநபர் விருப்பம் என்ற பெயரில் பரவும் சீரழிவுகள், சமூக அமைப்பையே சீர்குலைக்கும்

‘அருந்தமிழ் 50’ நூல் வெளியீடு

சாரல் ஆங்கில துணை இதழ் ஆசிரியர் ஜெயஸ்ரீ எம். சாரி எழுதிய கவிதை தொகுப்பான அருந்தமிழ் 50 என்ற நூலை திருவான்மியூரில் உள்ள இலக்கியச் சாரல்

இலக்கியச் சாரலின் மனங்களை வென்ற காவியக் கன்றுகள்!

இலக்கியச் சாரல் ஆசிரியர் ரெ.முரளி மற்றும் ஆங்கில இதழ் ஆசிரியர் ஜெயஶ்ரீ சாரி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். ஜானகி குமரேசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, ரேவதி ஸ்ரீநிவாசன் நன்றியுரை நிகழ்த்தினார்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

போர்ச் சூழலிலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிலையாக இருக்கும்!

மேற்காசியப் போர் நிமித்தம் கொஞ்சம் பாதிப்பு இருந்தாலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.6% என நிலையாக இருக்கும்.

Entertainment News

Popular Categories