January 23, 2025, 5:19 AM
23.8 C
Chennai

காங்கிரஸின் ஏழ்மை.. ஏழ்மை… எனும் ஜபமாலை உருட்டல்!

#image_title

கரீபி ஹடாவோ எனும் ஏழ்மையை அகற்றுவோம்

தமிழில்: ராமஸ்வாமி சுதர்ஸன்

நீங்கள் செங்கோட்டையில் இந்தப் பிரதமர்கள் ஆற்றிய உரைகளைக் கேட்டீர்களென்றால், இந்தக் குடும்பத்தின் அனைத்து பிரதமர்களின் உரைகளைக் கேட்டீர்களென்றால்,  அவர்களின் 20-25 நிமிட உரைகளில் 10 நிமிடங்கள் வரை, கரீபி எனும் ஏழ்மை பற்றி பேசுவார்கள். எந்த ஒரு தேர்தல்காலப் பரப்புரையை வேண்டுமானாலும் கேளுங்கள், அவர்கள் ………. ஜபமாலையை உருட்டித் தீர்ப்பார்கள்.   

நேரு, 1951 – நாம் இரண்டாவது போராட்டத்தை நடத்த வேண்டும், அந்த உண்மையான போராட்டம், இந்தியாவின் ஏழ்மையோடு நாம் தொடுக்கும் போர்.  இந்தியாவின் வேலையில்லாத் திண்டாட்டத்தோடு போர்.

இந்திரா காந்தி, 1982 – தேசத்திலிருந்து ஏழ்மை அகல வேண்டும் என்பது தான் இன்று நமது குறிக்கோள்.   பிற்பட்டிருக்கும் பகுதிகளில் இருப்போர் பிற்பட்ட நிலையிலிருந்து உயர வேண்டும்.

இந்திரா காந்தி, 1984 – தன்னிறைவான, மற்றவர்களை விடச் சிறப்பான வாழ்க்கை வாழ்வோரின் தேவைகளை நிறைவேற்றும் அதே வேளையில், வாழ்க்கையில் பின் தங்கிப் போன, ஏழ்மையில் இருப்போரின், பலவீனமானவர்களின் தேவைகளுக்கும் அதே அளவு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

ALSO READ:  பொங்கலுக்காக... கொத்து மஞ்சள் அறுவடை தீவிரம்!

ராஜீவ் காந்தி, 1985 – பாரதநாட்டின் ஏழ்மையை நாம் அகற்றவில்லை என்று சொன்னால், நாம் செய்யத் திட்டமிடும் அனைத்துப் பணிகளும் வீணாகியே போகும்.  ஆகையால் நாம் ஏழ்மையை அகற்றும் பணியில் சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறோம்.

ராஜீவ் காந்தி, 1987 – ஏழ்மையை அகற்றுவதற்கு நாங்கள் முதன்மை அளித்திருக்கிறோம்.    ஏழ்மையை அகற்றுவதில் எங்களின் முழுச் சக்தியையும் நாங்கள் செலுத்தியிருக்கிறோம்.

மன்மோஹன் சிங், 2005 – நமது இந்த வேகத்தை நாம் தொடர்ந்து மேற்கொண்டோமேயானால், வரவிருக்கின்ற 5-10 ஆண்டுகளில் பாரதம் முழுவதிலிருந்தும் ஏழ்மை, பட்டினிச் சாவு, நோய்களிலிருந்து விடுபட முடியும்.

ராகுல் காந்தி, 2013 – பாதி ரொட்டியாவது உண்போம் என்ற உங்களுடைய கோஷத்தை நான் மாற்ற விரும்புகிறேன்.  முழு ரொட்டியை உண்போம், 6 நாட்கள் வேலை செய்வோம், மருந்துகளை எடுப்போம், காங்கிரஸ் கட்சியைக் கொண்டு வருவோம்.  

சோனியா காந்தி, 2014 – நம் மண்ணிலிருந்து ஏழ்மை என்ற சாபம் முடிவுக்குக் கொண்டு வரப்படாத வரை நம்மால் நிம்மதியாக உறங்க முடியாது.

ALSO READ:  தீபாவளி அன்று ‘கங்கா ஸ்நானம் ஆச்சா’ என ஏன் கேட்கிறோம்?

ராகுல் காந்தி, 2019 – எங்களுடைய பணி, காங்கிரஸ் கட்சியின் பணி இந்தியாவைப் பாதுகாப்பது.   இந்தியாவின் ஏழைகளைப் பாதுகாப்பது.   பலவீனமானவர்களைப் பாதுகாப்பது.  

ராகுல் காந்தி, 2024 – ஒரே ஒரு அடியில், ஒரே ஒரு அடியில், இந்தியாவிலிருந்து ஏழ்மையை நாங்கள் அகற்றி விடுவோம்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதக் கலவரத்தை தூண்டும் திமுக.,? இந்து முன்னணி கண்டனம்

தமிழகத்தில் மதக்கலவரத்தை தூண்டுகிறதா திமுக. இன்று கேள்வி எழுப்பி, திருப்பரங்குன்றத்தில் திமுக...

கோமியம்… கோமூத்ரா… இன்னா மேட்டரு பா!

Amazon போன்ற பல இணையதளங்களில் கோமூத்ரம் விற்பனை செய்யப்படுகிறது.

விக்கிரமங்கலம் அங்காள ஈஸ்வரி கருப்புசாமி கோவில் மகா கும்பாபிஷேகம்

கும்பாபிஷேக ஏற்பாடுகளை திருப்பணிகுழு மற்றும் விக்கிரமங்கலம் எட்டூர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

பஞ்சாங்கம் ஜன.21- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் ஸ்ரீசுப்ரமணிய சுவாமி திருக்கோயில்!

கயிலாயத்தில் சிவபெருமான், பார்வதிக்கு பிரணவ மந்திர பொருளை உபதேசம் செய்தார். அப்போது அம்பிகையின் மடியில் இருந்த முருகன் மந்திரத்தை கேட்டுவிட்டார்.