December 6, 2025, 12:59 AM
26 C
Chennai

செங்கோட்டையில் தாயின் மடியில் அறக்கட்டளை முதியோர்களுக்கு புத்தாடை வழங்கல்!

1 scaled e1730105404441 - 2025


செங்கோட்டையில் தாயின் மடியில் சமூகநல அறக்கட்டளை சார்பில் முதியோர்களுக்கு புத்தாடை வழங்கல்.

செங்கோட்டை ஸ்ரீஜெயேந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வைத்து தாயின் மடியில் சமூகநல அறக்கட்டளை சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆதரவற்ற முதியோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தாயின் மடியில் சமூகநல அறக்கட்டளை சார்பில் கடந்த கொரோனா தொற்று காலத்திலிருந்து ஆதரவற்ற முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்கள்
வசிக்கும் பகுதிகளுக்கு நேரில் சென்று உணவு இன்றுவரையில் வழங்கி வருகிறது.

மேலும் பல்வேறு சமூக செயல்பாடுகள் மூலம் சிறந்த சேவையின் செய்து வருகிறது. அதன் ஒருபகுதியாக கடந்த 5ஆண்டுகளாக பண்டிகை காலங்களில் ஏழை,எளிய ஆதரவற்ற முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு புத்தாடைகள் வழங்கி வருகிறது. இந்தாண்டு நடந்த புத்தாடை வழங்கும் நிகழ்ச்சிக்கு யோகா பயிற்சி ஆசிரியா் செல்வக்குமார் தலைமை தாங்கினார்.

நகராட்சி சுகாதார அலுவலா் ரெங்கநாதன், தென்காசி ரோட்டரி கிளப் (சக்தி)தலைவி விஜயலெட்சுமி, பள்ளி முதல்வா் ராணி ராம்மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனா். அறக்கட்டளை நிறுவனத் தலைவா் கோமதிநாயகம் அனைவரையும் வரவேற்று பேசினார்.

அரசு பள்ளி ஆசிரியை அமுதா குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக குற்றாலம் ஐந்தருவி விவேகானந்தா ஆசிரம
ஸ்தாபகர் அகிலானந்த மகராஜ் கலந்து கொண்டு ஆசியுரை வழங்கி பயனாளிகளுக்கு புத்தாடைகள் வழங்கி வாழ்த்தினார்.

நிகழ்ச்சியில் சமூக ஆர்வலா்கள் ஆவுடையப்பன், தங்கராஜ், மற்றும் தாயின் மடியில் அறக்கட்டளையினுடைய நிர்வாகிகள் உறுப்பினா்கள் பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories