December 5, 2025, 5:47 PM
27.9 C
Chennai

ஏர்செல்லை அடுத்து ஏர்டெல்… கால் செய்ய முடியாமல் மக்கள் தவிப்பு!

idea airtel vodafone jio - 2025

ஏர்செல்லைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஏர்டெல் சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏர்டெல் வாடிக்கையாளர்களும் தங்கள் மொபைல் எண்ணில் இருந்து கால் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

ஜியோவின் வரவால் அண்மையில் தாக்குப்பிடிக்க முடியாமல் தளர்ந்து போனது, செல்பேசித் துறையில் துவக்கத்தில் கோலோச்சிய ஏர்செல் நிறுவனம். அந்நிறுவனத்தால் பல இடங்களில் சிக்னல் டவர்களுக்கு வாடகை கொடுக்கக் கூட இயலாத நிலை ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கடன் சுமை அதிகமானதால், தாங்கள் திவால் ஆனதாக அறிவிக்கக் கோரியது ஏர்செல்.

இந்நிலையில், செல்பேசி சந்தையில் ஓரளவு தாக்குப் பிடித்துவரும் ஏர்டெல்லும் தற்போது சிக்னல் பிரச்னையில் மாட்டிக் கொண்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜியோ கால் அழைப்புகள் சேவையிலும் பிரச்னை ஏற்பட்டது. அது போல் இன்று திடீரென்று பல இடங்களில் ஏர்டெல் வாடிக்கையாளர்கள், மற்ற தொலைபேசி எண்களுக்கு அழைப்புகளைச் செய்ய இயலாமல் தவித்தனர்.

இதனிடையே, இன்று சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஏர்செல் அலுவலகத்தில் ஏராளமான வாடிக்கையாளர்கள் திரண்டு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏர்செல் நிறுவனம் திவால் ஆனதால், லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் மற்ற தொலைத்தொடர்ப்பு நிறுவனங்களின் சேவைக்கு மாறி வருகின்றனர். அவ்வாறு வேறு நிறுவனங்களுக்கு மாற MNP எனப்படும் மொபைல் நம்பர் போர்டபிலிட்டி எண்ணை பழைய தொலைத்தொடர்பு நிறுவனம் வழங்க வேண்டும். ஆனால், ஏர்செல் நிறுவனத்தின் சேவை முற்றிலும் முடங்கியதால், MNP எண்ணைப் பெற பத்து நாட்களுக்கு மேலாகியும் பெற இயலாமல் அவதியடைந்து வருவதாக வாடிக்கையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில், எம்.என்.பி., கேட்டு சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஏர்செல் அலுவகத்தில் ஒரே நேரத்தில் 300க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். அப்போது, சர்வர் கோளாறு ஏற்பட்டுள்ளதாக ஏர்செல் நிர்வாகத்தினர் கூறியதால், வாடிக்கையாளர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்ட அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories