
விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது பலர் படுகாயம் பலி எண்ணிக்கை உயரும் என அச்சம் ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் அருகே வி முத்துலிங்கபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான சென்னை உரிமம் பெற்ற வனஜா பயர் ஒர்க்ஸ் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் வெடிமருந்து இருக்கும் அறையில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக மருந்து கலவையில் ஏற்பட்ட உராய்வு காரணமாக திடீரென வெடிவிபத்து ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

இதில் 4 அறைகள் தரைமட்டமாகின.இந்த
வெடி விபத்தில் முதலில் 15 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்த்து கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் தற்போது 23 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.அவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
மேலும் கட்டிட இடிபாடுகளில் தொழிலாளர்கள் சிக்கி உள்ளனரா என ஜே.சி.பி எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு இடிபாடுகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.சம்பவம்
அறிந்து விரைந்து வந்த வச்சக்காரப்பட்டி போலீசார் மற்றும் சிவகாசி விருதுநகர் தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.சம்பவ இடத்திற்கு உயர் அதிகாரிகள் விரைந்து வந்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து
23 பேர் உயிரிழப்புக்கு இந்திய ஜனாதிபதி பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளனர்
வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை பட்டாசு ஆலைகள் இயங்காது.
தேர்தல் நாளான 23 ம் தேதி விடுமுறை அளிக்க வேண்டிய கட்டாயம் உள்ளதால் இன்று
வேலை வைத்ததாக கூறப்படுகிறது.
இதில் 30 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் இருந்தனர்.
இந்நிலையில் இன்று மாலை ஒரு அறையில் உராய்வு காரணமாக திடீரென பட்டாசு வெடித்தது.தீயானது மற்ற அறைகளுக்கும் பரவியது.வெடிச்சத்தம் கேட்ட தொழிலாளர்கள் ஆலையை விட்டு வெளியே தப்பி ஓடினர். இந்த வெடி விபத்தில் 4 அறைகள் சேதமடைந்தன.
23பேர் உயிரிழந்துள்ளனர்
6 பேர் காயமடைந்தனர் .
தகவலறிந்த சிவகாசி சாத்தூர் விருதுநகரை சேர்ந்த தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.
தீயணைப்புத் துறையினர்
தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
உடல் கருகிய நிலையில் உள்ளதால் ஆண் பெண் என உடனடியாக அடையாளம் காண முடியவில்லை என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்




