ஸ்ரீரங்கம் தொகுதிக்கு இடைத் தேர்தல் வரும் பிப். 13-ம் தேதி நடக்கிறது. இதில் காங்கிரஸ் போட்டியிடாது என்று இன்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அறிவித்தார். இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக, தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க, ஆகிய கட்சிகள் அறிவித்து, தங்கள் வேட்பாளர்களையும் அறிவித்து விட்டன. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி போட்டியிடாது என சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் இளங்கோவன் இன்று கூறினார். ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடாது எந்தக் கட்சிக்கும் ஆதரவும் அளிக்காது. இந்தத் தேர்தலில் போட்டியிட உள்ள கட்சிகள் பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் முயற்சியில் இறங்கியுள்ளன. எனவே தேர்தல் நியாயமாக நடக்காது என்பதால் எங்கள் சக்தியை வீணடிக்க நாங்கள் விரும்பவில்லை. என்று கூறினார். ஸ்ரீரங்கம் தொகுதிக்கான இடைத் தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 13-ந்தேதி நடக்கிறது. அ.தி.மு.க. சார்பில் வளர்மதியும், தி.மு.க. சார்பில் ஆனந்தும், பாரதிய ஜனதா கட்சி சார்பில் சுப்பிரமணியமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அண்ணாதுரையும் போட்டியிடுகிறார்கள். இதில் வளர்மதி (அ.தி.மு.க.), ஆனந்த் (தி.மு.க.), சுப்பிரமணியம் (பா.ஜ.க.) ஆகியோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து தேர்தல் பணியையும் தொடங்கியுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக கட்சியின் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்கள் தொகுதியில் முகாமிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். தே.ஜ. கூட்டணியில் இருந்து வெளியேறிய ம.தி.மு.க., மற்றும் பா.ம.க., த.மா.கா. ஆகிய கட்சிகள் இத்தேர்தலில் போட்டியிடவில்லை. மேலும், யாருக்கும் தாங்கள் ஆதரவு அளிக்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளன. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியும் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடாமல் பின் வாங்கியுள்ளது.செய்திருப்பதாகவும், இன்று வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாகவும் தகவல் வெளியானது. ஆனால், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ‘ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடப் போவதில்லை என்றும், வேறு கட்சிகள் எதற்கும் ஆதரவும் அளிக்கப் போவதில்லை என்றும்’ அறிவித்துள்ளார்.
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...
உரத்த சிந்தனை
‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?
சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
கட்டுரைகள்
வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!
வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப் பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே போதும் என்பார்கள்
ஆன்மிகச் செய்திகள்
ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...
உரத்த சிந்தனை
‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?
சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
கட்டுரைகள்
வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!
வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப் பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே போதும் என்பார்கள்
ஆன்மிகச் செய்திகள்
ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...
இந்தியா
வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
சற்றுமுன்
சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...
Entertainment News
Previous article
Next article

