தேசியக் கொடி ஏற்றப் பட்டபோது சல்யூட் அடிக்காமல் அமீத் அன்சாரி அவமரியாதை?

Published:

தில்லி இன்று நாட்டின் 66 வது குடியரசு தினம் நாடு முழுவதும் கொண்டாடப் பட்டது. குடியரசு தின அணிவகுப்பு தில்லி ராஜ்பத்தில் நடைபெற்றது. இதில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். ansari இந்த நிகழ்வின் முதலவதாக நடைபெற்ற தேசியக் கொடி ஏற்றத்தின் போது, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் உள்ளிட்டோர் சல்யூட் அடித்து மரியாதை செய்தனர். ஆனால், மேடையில் இருந்த துணை குடியரசுத் தலைவர் அமீத் அன்சாரி இரு கைகளையும் தொங்கவிட்டபடி இருந்தார். இது சமூக வலைத்தளங்களில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு சல்யூட் அடிக்க இயலாது என்றாலோ, அவ்வாறு தோன்றினாலோ அவர் மேடையை விட்டு அனைவருடனும் கீழே நின்றிருக்கலாம் என்று பெரும்பாலோர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Related articles

Recent articles

spot_img