December 5, 2025, 5:57 PM
27.9 C
Chennai

ஜெயலலிதா ஆவி கடுங் கோபத்தோட துரத்துது… தமிழக பிரச்னைகளுக்கு காரணமே அதான்: கண்டுபிடித்த சிம்பு!

simbu - 2025

தமிழ்த் திரையுலகம் சார்பில் நேற்று காலை மௌன அறவழி கண்டனப் போராட்டம் நடைபெற்றது. அதில் அஜித், சிம்பு உள்ளிட்ட சில நடிகர்கள் கலந்து கொள்ளவில்லை. அஜித் வழக்கம் போல் தனி டிராக்தான். எந்த வித அலட்டலும் இல்லாமல் என் வழி தனி வழி என இந்த அரசியல் நிகழ்வுகளில் எல்லாம் கலந்து கொள்ளாமல் தன் கலையுலக வாழ்வில் மட்டும் கவனம் செலுத்திக் கொண்டு இருந்து விட்டார்.

இருந்தாலும் சிம்புவுக்கு மட்டும், தான் எதற்காக இந்த மௌனப் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பதை உலகுக்கு தெரியப் படுத்தவேண்டிய உந்துதலுக்குத் தள்ளப்பட்டார். அதற்கான விளக்கத்தைக் கொடுக்க ஆசைப்பட்ட சிம்பு நேற்று மாலை பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

அப்போது விதவிதமான ஐடியாக்களை எல்லாம் கொடுத்தார். எத்தனை பிரச்னைகள் உண்டோ அத்தனை பிரச்னைகளுக்கும் காரணம் என்ன என்று அவருக்குத் தெரிந்திருக்கிறது. எனவே பல தீர்வுகளை கேமரா முன் நடிப்பது போலவே சொல்லிக் காட்டினார். கோபப் பட்டார். வசனம் பேசினார். கண் கலங்கினார்.

கேள்வி கேட்பது பத்திரிகையாளர்களாக இருந்தாலும், அவரால் அழைக்கப்பட்டிருந்த ரசிகர்களைப் பார்த்தே பெரும்பாலும் பதில் சொன்ன சிம்பு, ஒரு சில இடங்களில் கோபத்தில் பேச, அவரது ரசிகர்களும் அதற்குக் கை தட்டினர்.

திடீரென இந்தப் பிரச்னைகளுக்கு எல்லாம் காரணம் என்ன தெரியுமா எனக் கூறிய சிம்பு, தமிழ் சினிமாவில் பேய் பங்களாக்களை காட்டுவார்கள். பேய்கள் சும்மா தான் இருக்கும். அதுக்கு யாராவது தீங்கு செய்திருந்தா, பேய்கள் துரத்தி துரத்தி பழிவாங்கும். அது மாதிரி…

முதல்வராக இருந்த ஜெயலலிதா உயிரிழந்தது முதல் பிரச்னைகள்தான். பிரச்னை மேல் பிரச்னை. அங்க பிரச்னை, இங்க பிரச்னை… அட எல்லாம் பிரச்னைகள்தான் என்றவர், அவரது மரணத்தில் உள்ள உண்மை வெளிவந்தால்தான், இந்தப் பிரச்னைக்கெல்லாம் முடிவு கிடைக்கும் என்று சொல்லி முடித்தார்.

பத்திரிகையாளர்கள் மீது பாய்ந்தார்… கண்டதையும் எழுதுகிறார்கள் என்றார்….சமூக ஊடகங்களை வைத்து எழுதுகிறார்கள் என்றார்.

தோனிக்கு ஒரு ரிக்வஸ்ட் வேறு கொடுத்தார். கர்நாடகத்துகிட்ட கேட்டா போதும் தண்ணி வந்துடும் என்றார்.

ஒரு சந்தர்ப்பத்தில் காவிரியில் கர்நாடகா மக்களுக்கே தண்ணீர் இல்லாத போது அவர்கள் எப்படி தருவார்கள். வீணாகப் போகும் நீரை அவர்கள் நமக்குத் தரலாமே என்றார். அப்துல் கலாம் ஆவி சொன்னது, கர்நாடகத் தாய்மார்களிடம் மீதமான தண்ணியைக் கேட்போம் என என்னன்னவோ பேசினார். பொறுமையாக இருந்த பத்திரிகையாளர்கள் ஒரு கட்டத்தில் கேள்விகளால் துளைத்தார்கள் . அதற்கு பதில் சொல்ல முடியாத சிம்பு, சட்டென பத்திகையாளர் சந்திப்பை முடித்துக் கொண்டு ஓடிவிட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories