திருவண்ணாமலை சித்ரா பவுர்ணமி சிறப்பு இலவசபஸ்வசதி

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் ஆயிரக்கணக்கானவர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். சித்ரா பவுர்ணமி கூடுதல் சிறப்பு வாய்ந்ததால் பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும். எனவே அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக செய்து வருகிறது. அன்று பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் வர அனுமதிக்கப்படவில்லை. தற்காலிக பஸ் நிலையங்கள் பல்வேறு இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.அங்கிருந்து பயணிகள் கிரிவலம் புறப்படும் இடத்திற்கு ஆட்டோக்களில் தான் வர முடியும். ஆட்டோ டிரைவர்கள் அதிக கட்டணம் கேட்பதை தடுக்க மாவட்ட நிர்வாகமே தலையிட்டு ஆட்டோ கட்டணத்தை நிர்ணயித்துள்ளது.அத்தியந்தல் தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து அரசு கலை கல்லூரி மைதானம் வரையும் (பெரும்பாக்கம்), அத்தியந்தல் தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து அங்காளம்மன் கோவில் வரையும், திருக்கோவிலூர் ரோடு முதல் அத்தியந்தல் வரையும் ஆட்டோவில் தனி நபர் கட்டணம் ரூ.20 வசூலிக்க வேண்டும்.வேட்டவலம் தற்காலிக பஸ் நிலையம் முதல் திருக்கோவிலூர் தற்காலிக பஸ் நிலையம் வரையும், திருக்கோவிலூர் தற்காலிக பஸ் நிலையம் முதல் அங்காளம்மன் கோவில் வரையும், மணலூர் பேட்டை சாலை முதல் அங்காளம்மன் கோவில் வரையும், அரசு கலை கல்லூரி முதல் அங்காளம்மன் கோவில் வரையும், திண்டிவனம் ரோடு தற்காலிக பஸ் நிலையம் முதல் திருவள்ளுவர் சிலை வரையும், திண்டிவனம் ரோடு தற்காலிக பஸ் நிலையம் முதல் காந்தி நகர் பைபாஸ் ரோடு 6 வது குறுக்கு தெரு வரையும், நல்லவன்பாளையம் முதல் அங்காளபரமேஸ்வரி கோவில் வரையும் தனிநபர் ஆட்டோ கட்டணமாக ரூ.15 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டணங்கள் வருகிற சித்ரா பவுர்ணமி விழாவுக்கு மட்டுமே பொருந்தும்.மேலும் கிரிவல பாதையில் பொதுமக்கள் நலன் கருதி பக்தர்களுக்கான இலவச பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. தற்காலிக பஸ் நிலையங்களிலிருந்து கிரிவல பாதைக்கு வருவதற்கு இலவசபஸ்வசதி செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதனை பயன்படுத்தி கொள்ளலாம் என திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories