மு.க.ஸ்டாலினால் கடத்தப்பட்டதாகக் கூறப்படுவது குறித்து பாத்திமா பாபு என்ன சொல்கிறார்?

fathima babu1 - 2026

சென்னை: தூர்தர்ஷனில் செய்தி வாசிப்பாளராக இருந்த பாத்திமா பாபுவை, மு.க.ஸ்டாலின் கடத்திக் கொண்டு வந்து ஒரு வாரம் வரை வைத்திருந்து பின்னர் திருப்பி அனுப்பினார் என்று வெகு காலமாக ஒரு தகவல் இதழ்களிலும் சரி, மேடைகளிலும் சரி.. சொல்லப் படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, நெருக்குதலுக்கு உள்ளான பாத்திமா பாபு பெரிதாக வாய் திறந்து எதையும் வெளிப்படையாகச் சொன்னதில்லை. அவருக்கும் கணவர் குடும்பம் என்று ஆகிவிட்ட நிலையில், ஒரு தகவல் அல்லது புரளி தன்னைப் பற்றியும் ஒரு அரசியல் தலைவரின் மகன் மற்றும் துணை முதல்வர் அந்தஸ்தில் இருந்த ஒருவர் குறித்தும் வரும் போது அது குறித்து விளக்கம் அளிக்கவுமில்லை.

fathima babu2 - 2026

பாத்திமா பாபுவும் அதிமுக.,வில் இணைந்து, ஜெயலலிதாவின் தலைமையின் கீழ் பணியாற்றினார். ஜெயா டிவியில் நிகழ்ச்சிகள் கொடுத்தார். தொடர்களில் நடித்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக.,வில் இருந்து சிறிது சிறிதாக விலகிக் கொள்ளத் தொடங்கினார்.

ALSO READ:  திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

தற்போதைய சூழலில் ஆளும் தரப்பு, அல்லது அதிமுக.,வின் ஆதரவு இல்லாத நிலையில் ஜெயா டிவி., பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. இதனால் அதிமுக.,வில் இருந்த பலரும் கொஞ்சம் கொஞ்சமாக தங்களை அந்தக் கட்டில் இருந்து விடுவித்துக் கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் பாத்திமா பாபு குறித்த தகவல்கள் ஊடகங்களில் ஸ்டாலினைப் பற்றிச் சொல்லும் போது அரசியல் ரீதியாக விமர்சிக்கப் பட்டு வரும் நிலையில், அது குறித்து விளக்கம் அளிக்க அவர் முன்வந்திருக்கிறார்!

தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளர்களில் மிகவும் பிரபலமாக இருந்தவர் பாத்திமா பாபு. மிகவும் அழகானவர் என்று வாசகர்கள் தூர்தர்ஷனுக்கு நேயர் கடிதம் எழுதி அனுப்புவர். அப்படிப்பட்ட பாத்திமா பாபுவை மு.க.ஸ்டாலின் கடத்திச் சென்று மிரட்டி வைத்திருந்தார் என ஒரு தகவல் வெகு காலமாகவே உலா வந்து கொண்டிருக்கிறது. அதற்கு இதுவரை பதில் சொல்லாமல் இருந்த பாத்திமா பாபு அண்மையில் ஒரு ஊடகத்தில் சொல்லும் போது, என் வாழ்வில் அதுபோன்ற ஒரு சம்பவமே நடக்கவில்லை. ஸ்டாலின் என்னைக் கடத்தியதாகச் சொல்லப்படும் அந்தக் காலகட்டத்தில் நான் அதிர்ச்சியடைந்து, இது குறித்து ஒரு வார இதழ் நிருபரிடம் விளக்கம் கொடுத்தேன். ஆனால், ஏனோ தெரியவில்லை, நான் சொன்ன விளக்கம் எந்த ஊடகங்களிலுமே வெளியாகவில்லை.

ALSO READ:  தாமிரபரணிக் கரை ஆலயத்தில்... வழிபாட்டில் திருவள்ளுவர்!

fathima - 2026

தூர்தர்ஷனில் செய்தி வாசிப்பாளராக இருந்தபோது, ‘சித்திரப்பாவை’ எனும் தொடரில் நடிக்க ஒப்புக் கொண்டிருந்தேன். தூர்தர்ஷன் நடைமுறைப் படி தொடரில் நடித்து முடிக்கும் வரை செய்தி வாசிக்க முடியாது. இதனால், நான் அந்த காலகட்டத்தில் செய்தி வாசிக்கவில்லை. சித்திரப்பாவை தொடர் மொத்தம் 13 வாரங்களில் முடிந்ததும் நான் மீண்டும் செய்தி வாசிக்க ஆரம்பித்தேன். இந்தக் காலகட்டத்தில் என்னை செய்தி வாசிப்பாளராக தினமும் பார்க்க முடியவில்லை என்பதால், யாரோ இதுபோன்று கிளப்பி விட்டிருப்பார்கள் என தோன்றுகிறது.

நான் விளக்கம் அளித்த பிறகும், அதே வதந்தி உண்மை போல உலவுகிறது. இதற்கு இனி நான் ஒன்றும் சொல்ல முடியாது. திருமணத்திற்கு முன்பும், பிறகும், எனது கணவர் பாபுதான், டிவி அலுவலகத்திற்கு கொண்டு வந்துவிட்டு விட்டு, மீண்டும் அழைத்துச் செல்வது வழக்கம். என்னைப் பற்றி நான் சொல்வதுதான் உண்மை. இது குறித்து இனி விளக்கம் கொடுக்கப்போவதில்லை என்றார் பாத்திமா பாபு.

இவ்வாறு பாத்திமா பாபு கூறியதாக, தற்போது செய்திகள் உலா வருகின்றன. நெருப்பில்லாமல் புகையாது என்பார்கள். உண்மையில் என்ன நடந்தது என்பது, பாத்திமா பாபுவுக்கே வெளிச்சம்.

ALSO READ:  தகுந்த வைத்தியம் தேவை!

2 COMMENTS

  1. அவர் பொய் கூறுகிறார், ஸ்டாலின் மிகவும் மோசவானவன் , பாத்திமா மட்டும் அல்ல கோபாலபுரத்தில் நிறைய பிராமண பெண்களை மானபங்கம் செய்தவன் , நப்பியாரின் பேத்தியை கடத்தி சென்று மானபங்கம் செய்தவன் இந்த மு.க.ஸ்டாலின் , உண்மையை யாராலும் மறைக்க முடியாது ,

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories