மு.க.ஸ்டாலினால் கடத்தப்பட்டதாகக் கூறப்படுவது குறித்து பாத்திமா பாபு என்ன சொல்கிறார்?

fathima babu1 - 2026

சென்னை: தூர்தர்ஷனில் செய்தி வாசிப்பாளராக இருந்த பாத்திமா பாபுவை, மு.க.ஸ்டாலின் கடத்திக் கொண்டு வந்து ஒரு வாரம் வரை வைத்திருந்து பின்னர் திருப்பி அனுப்பினார் என்று வெகு காலமாக ஒரு தகவல் இதழ்களிலும் சரி, மேடைகளிலும் சரி.. சொல்லப் படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, நெருக்குதலுக்கு உள்ளான பாத்திமா பாபு பெரிதாக வாய் திறந்து எதையும் வெளிப்படையாகச் சொன்னதில்லை. அவருக்கும் கணவர் குடும்பம் என்று ஆகிவிட்ட நிலையில், ஒரு தகவல் அல்லது புரளி தன்னைப் பற்றியும் ஒரு அரசியல் தலைவரின் மகன் மற்றும் துணை முதல்வர் அந்தஸ்தில் இருந்த ஒருவர் குறித்தும் வரும் போது அது குறித்து விளக்கம் அளிக்கவுமில்லை.

fathima babu2 - 2026

பாத்திமா பாபுவும் அதிமுக.,வில் இணைந்து, ஜெயலலிதாவின் தலைமையின் கீழ் பணியாற்றினார். ஜெயா டிவியில் நிகழ்ச்சிகள் கொடுத்தார். தொடர்களில் நடித்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக.,வில் இருந்து சிறிது சிறிதாக விலகிக் கொள்ளத் தொடங்கினார்.

தற்போதைய சூழலில் ஆளும் தரப்பு, அல்லது அதிமுக.,வின் ஆதரவு இல்லாத நிலையில் ஜெயா டிவி., பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. இதனால் அதிமுக.,வில் இருந்த பலரும் கொஞ்சம் கொஞ்சமாக தங்களை அந்தக் கட்டில் இருந்து விடுவித்துக் கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் பாத்திமா பாபு குறித்த தகவல்கள் ஊடகங்களில் ஸ்டாலினைப் பற்றிச் சொல்லும் போது அரசியல் ரீதியாக விமர்சிக்கப் பட்டு வரும் நிலையில், அது குறித்து விளக்கம் அளிக்க அவர் முன்வந்திருக்கிறார்!

தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளர்களில் மிகவும் பிரபலமாக இருந்தவர் பாத்திமா பாபு. மிகவும் அழகானவர் என்று வாசகர்கள் தூர்தர்ஷனுக்கு நேயர் கடிதம் எழுதி அனுப்புவர். அப்படிப்பட்ட பாத்திமா பாபுவை மு.க.ஸ்டாலின் கடத்திச் சென்று மிரட்டி வைத்திருந்தார் என ஒரு தகவல் வெகு காலமாகவே உலா வந்து கொண்டிருக்கிறது. அதற்கு இதுவரை பதில் சொல்லாமல் இருந்த பாத்திமா பாபு அண்மையில் ஒரு ஊடகத்தில் சொல்லும் போது, என் வாழ்வில் அதுபோன்ற ஒரு சம்பவமே நடக்கவில்லை. ஸ்டாலின் என்னைக் கடத்தியதாகச் சொல்லப்படும் அந்தக் காலகட்டத்தில் நான் அதிர்ச்சியடைந்து, இது குறித்து ஒரு வார இதழ் நிருபரிடம் விளக்கம் கொடுத்தேன். ஆனால், ஏனோ தெரியவில்லை, நான் சொன்ன விளக்கம் எந்த ஊடகங்களிலுமே வெளியாகவில்லை.

fathima - 2026

தூர்தர்ஷனில் செய்தி வாசிப்பாளராக இருந்தபோது, ‘சித்திரப்பாவை’ எனும் தொடரில் நடிக்க ஒப்புக் கொண்டிருந்தேன். தூர்தர்ஷன் நடைமுறைப் படி தொடரில் நடித்து முடிக்கும் வரை செய்தி வாசிக்க முடியாது. இதனால், நான் அந்த காலகட்டத்தில் செய்தி வாசிக்கவில்லை. சித்திரப்பாவை தொடர் மொத்தம் 13 வாரங்களில் முடிந்ததும் நான் மீண்டும் செய்தி வாசிக்க ஆரம்பித்தேன். இந்தக் காலகட்டத்தில் என்னை செய்தி வாசிப்பாளராக தினமும் பார்க்க முடியவில்லை என்பதால், யாரோ இதுபோன்று கிளப்பி விட்டிருப்பார்கள் என தோன்றுகிறது.

நான் விளக்கம் அளித்த பிறகும், அதே வதந்தி உண்மை போல உலவுகிறது. இதற்கு இனி நான் ஒன்றும் சொல்ல முடியாது. திருமணத்திற்கு முன்பும், பிறகும், எனது கணவர் பாபுதான், டிவி அலுவலகத்திற்கு கொண்டு வந்துவிட்டு விட்டு, மீண்டும் அழைத்துச் செல்வது வழக்கம். என்னைப் பற்றி நான் சொல்வதுதான் உண்மை. இது குறித்து இனி விளக்கம் கொடுக்கப்போவதில்லை என்றார் பாத்திமா பாபு.

இவ்வாறு பாத்திமா பாபு கூறியதாக, தற்போது செய்திகள் உலா வருகின்றன. நெருப்பில்லாமல் புகையாது என்பார்கள். உண்மையில் என்ன நடந்தது என்பது, பாத்திமா பாபுவுக்கே வெளிச்சம்.

2 COMMENTS

  1. அவர் பொய் கூறுகிறார், ஸ்டாலின் மிகவும் மோசவானவன் , பாத்திமா மட்டும் அல்ல கோபாலபுரத்தில் நிறைய பிராமண பெண்களை மானபங்கம் செய்தவன் , நப்பியாரின் பேத்தியை கடத்தி சென்று மானபங்கம் செய்தவன் இந்த மு.க.ஸ்டாலின் , உண்மையை யாராலும் மறைக்க முடியாது ,

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories