தி.மு.க.,வோடு கூட்டணி இல்லை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சொல்கிறார்

101092008 whatsappimage2018 04 29at5.55.11pm - 2026

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், மாநில சுயாட்சியை மீட்பது குறித்து பேசுவதற்காக திமுக தலைவர் மு.கருணாநிதி, செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை இன்றுகோபாலபுரத்தில் சந்தித்ததாக தெரிவித்துள்ளார் .
இருமாநில அரசியல் தலைவர்களின் சந்திப்பை அடுத்து, ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சந்திரசேகரராவ் மற்றும் ஸ்டாலின் ஆகியோர் மாநில அரசின் அதிகாரத்தை பற்றி விரிவாக பேசியதாக தெரிவித்தனர்.
இந்தியாவின் எதிர்கால நலனுக்காகவே பிற மாநில அரசியல் தலைவர்களை சந்திக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெலுங்கானா ரஷ்ட்ரிய சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகரராவ் தெரிவித்தார் ”இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருக்கவேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். அதை நோக்கியே எங்களது பயணம் இருக்கும். மேற்குவங்க முதல்வர் மம்தா பேனர்ஜியிடம் பேசியுள்ளோம். மூன்றாவது அணி அமைக்கிறோம் என்று ஊடகங்கள் பேசுகின்றன. நாங்கள் மாநில சுயாட்சி குறித்து விவாதித்தோம்,” என்று கூறினார்.
மேலும் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபுநாயுடுவையும் விரைவில் சந்திக்கவுள்ளதாக அவர் கூறினார். ”தென்மாநிலங்களின் உரிமைகளை கேட்டுப்பெறுவோம். எங்களது சந்திப்பை அரசியலாக்க வேண்டாம்,” என்று சந்திரசேகரராவ் தெரிவித்தார்.
விரைவில் தெலுங்கானாவில் நடைபெறவுள்ள நலத்திட்ட தொடக்கவிழாவில் ஸ்டாலின் பங்கேற்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் வரும்போது கூட்டணி குறித்து அறிவிப்பதாக கூறிய திமுக செயல் தலைவர் ஸ்டாலின், ”சந்திரசேகரராவ் கலைஞரை நேரில் சந்தித்து, உடல்நலன் பற்றி விசாரித்தார். இந்தியாவின் மதச்சார்பின்மையைக் காப்பாற்றுவது, மாநிலங்களுக்கு கூடுதல் உரிமையை பெறுவது, கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றுவது உள்ளிட்ட விவகாரங்களைப் பற்றி ஆலோசித்தோம். மத்திய அரசின் சர்வாதிகார போக்கை குறித்து நீண்ட நேரம் விவாதித்தோம். தொடர்ந்து பேச முடிவெடுத்துள்ளோம். இது ஆரோக்கியமான சந்திப்பு. மாநில சுயாட்சி மாநாடு நடத்துவது குறித்தும் பேசினோம்,” என்றார்.
இரு மாநில அரசியல் தலைவர்களும் மூன்றாவது அணி அமைக்க முயற்சி எடுத்துவருகின்றனரா என்று செய்தியாளர்கள் கேட்டபோது சந்திரசேகரராவ் தனது சகோதரர் ஸ்டாலினை சந்திக்க வந்ததாகவும், மாநில சுயாட்சி குறித்து பல்வேறு மாநில அரசியல் தலைவர்களை சந்தித்துவருவதாகவும் கூறினார். அதே நேரம் ”எல்லா விவகாரங்களைப் பற்றியும் பேசியதாகவும், எல்லாவற்றையும் செய்தியாளர்களிடம் சொல்ல விரும்பவில்லை,” என்றும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories