December 6, 2025, 12:59 AM
26 C
Chennai

தி.மு.க.,வோடு கூட்டணி இல்லை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சொல்கிறார்

101092008 whatsappimage2018 04 29at5.55.11pm - 2025

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், மாநில சுயாட்சியை மீட்பது குறித்து பேசுவதற்காக திமுக தலைவர் மு.கருணாநிதி, செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை இன்றுகோபாலபுரத்தில் சந்தித்ததாக தெரிவித்துள்ளார் .
இருமாநில அரசியல் தலைவர்களின் சந்திப்பை அடுத்து, ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சந்திரசேகரராவ் மற்றும் ஸ்டாலின் ஆகியோர் மாநில அரசின் அதிகாரத்தை பற்றி விரிவாக பேசியதாக தெரிவித்தனர்.
இந்தியாவின் எதிர்கால நலனுக்காகவே பிற மாநில அரசியல் தலைவர்களை சந்திக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெலுங்கானா ரஷ்ட்ரிய சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகரராவ் தெரிவித்தார் ”இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருக்கவேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். அதை நோக்கியே எங்களது பயணம் இருக்கும். மேற்குவங்க முதல்வர் மம்தா பேனர்ஜியிடம் பேசியுள்ளோம். மூன்றாவது அணி அமைக்கிறோம் என்று ஊடகங்கள் பேசுகின்றன. நாங்கள் மாநில சுயாட்சி குறித்து விவாதித்தோம்,” என்று கூறினார்.
மேலும் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபுநாயுடுவையும் விரைவில் சந்திக்கவுள்ளதாக அவர் கூறினார். ”தென்மாநிலங்களின் உரிமைகளை கேட்டுப்பெறுவோம். எங்களது சந்திப்பை அரசியலாக்க வேண்டாம்,” என்று சந்திரசேகரராவ் தெரிவித்தார்.
விரைவில் தெலுங்கானாவில் நடைபெறவுள்ள நலத்திட்ட தொடக்கவிழாவில் ஸ்டாலின் பங்கேற்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் வரும்போது கூட்டணி குறித்து அறிவிப்பதாக கூறிய திமுக செயல் தலைவர் ஸ்டாலின், ”சந்திரசேகரராவ் கலைஞரை நேரில் சந்தித்து, உடல்நலன் பற்றி விசாரித்தார். இந்தியாவின் மதச்சார்பின்மையைக் காப்பாற்றுவது, மாநிலங்களுக்கு கூடுதல் உரிமையை பெறுவது, கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றுவது உள்ளிட்ட விவகாரங்களைப் பற்றி ஆலோசித்தோம். மத்திய அரசின் சர்வாதிகார போக்கை குறித்து நீண்ட நேரம் விவாதித்தோம். தொடர்ந்து பேச முடிவெடுத்துள்ளோம். இது ஆரோக்கியமான சந்திப்பு. மாநில சுயாட்சி மாநாடு நடத்துவது குறித்தும் பேசினோம்,” என்றார்.
இரு மாநில அரசியல் தலைவர்களும் மூன்றாவது அணி அமைக்க முயற்சி எடுத்துவருகின்றனரா என்று செய்தியாளர்கள் கேட்டபோது சந்திரசேகரராவ் தனது சகோதரர் ஸ்டாலினை சந்திக்க வந்ததாகவும், மாநில சுயாட்சி குறித்து பல்வேறு மாநில அரசியல் தலைவர்களை சந்தித்துவருவதாகவும் கூறினார். அதே நேரம் ”எல்லா விவகாரங்களைப் பற்றியும் பேசியதாகவும், எல்லாவற்றையும் செய்தியாளர்களிடம் சொல்ல விரும்பவில்லை,” என்றும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories