ஜனநாயகத்தை காப்பாற்ற தேர்தல் தொடர்பான வழக்குகளை 6 மாதத்தில் விசாரித்து முடிக்கவேண்டும் : உச்ச நீதிமன்றம்

 

தேர்தல் வழக்குகளை 6 மாதத்தில் விசாரித்து முடிக்கவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு யோசனை தெரிவித்து உள்ளது.மணிப்பூர் மாநில சட்டசபைக்கு 2012-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட மாய்ரெம்பாம் பிரிதிவிராஜ் என்பவரை எதிர்த்து சரத்சந்திர சிங் என்பவர் மணிப்பூர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதில், ‘‘பிரிதிவிராஜ் மைசூர் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. முதுநிலை பட்டம் பெற்றிருப்பதாக தேர்தலின்போது தனது வேட்பு மனுவில் தெரிவித்து இருக்கிறார். இது தவறான தகவல் ஆகும். எனவே அவருடைய வெற்றியை செல்லாது என அறிவிக்கவேண்டும்’’ என்று அவர் கூறியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணை மணிப்பூர் ஐகோர்ட்டில் அவ்வப்போது தள்ளி வைக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து வழக்கு விசாரணை தாமதம் ஆவதாக கூறி சரத்சந்திரசிங் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:-

ஜனநாயகத்தின் புனிதத்தை காப்பாற்ற தேர்தல் தொடர்பான வழக்குகள் விரைவுபடுத்தப்படவேண்டும். ஏனெனில் ஒரு வாக்காளர் தனது வாக்கை பொறுப்பான ஒரு குடிமகனை தேர்ந்தெடுப்பதற்காக பயன்படுத்துகிறார்.

எனவே, வாக்காளர்களின் குற்றச்சாட்டுக்கு உள்ளாகும்போது வெற்றி பெற்றவர் வாக்காளர்களின் நம்பிக்கையை பெறுவது முக்கியமானது. தொடர்ந்து வழக்கை இழுத்தடிக்கும் வழிமுறையை தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பயன்படுத்தக்கூடாது.

தேர்தல் வழக்குகள் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணையை 6 மாதத்துக்குள் முடித்து வைக்கவேண்டும். ஏனெனில் வழக்கை தாமதப்படுத்தும் போக்கை எந்த வகையிலும் சட்டம் அனுமதிக்கவில்லை. எனவே இந்த வழக்கை 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் முடிக்கவேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

Topics

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories