செல் போனை பறித்து ஓடிய கைதியால் பரபரப்பு

Published:

வேலுார் சிறையில், செல் போனை பறித்து ஓடிய கைதியை விரட்டிப் பிடித்து, சிறை காவலர் பறிமுதல் செய்தனர்.வேலுார், தொரப்பாடியில் உள்ள மத்திய ஆண்கள் சிறையில், சிறை காவலர் பாலமுருகன் சோதனை செய்து கொண்டிருந்தார். அப்போது, ஆறாவது பிளாக்கில் அடைக்கப்பட்டிருந்த, ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சென்னையைச் சேர்ந்த அந்தோணி, 43, மொபைல்போனில் பேசிக் கொண்டு இருந்தார்.

சிறை காவலர் பாலமுருகன் அவரிடமிருந்து, செல்போனை பறிமுதல் செய்தார். இதனால், அதிர்ச்சியடைந்த கைதி அந்தோணி, திடீரென, சிறைக் காவலரிடமிருந்து, செல்போனை பறித்துக் கொண்டு ஓடினார்.அவரை, பாலமுருகன் துரத்திச் சென்றார். பல இடங்களில் ஒளிந்து, ஒளிந்து சென்ற அந்தோணியை, அரை மணி நேரம் போராட்டத்திற்கு பின் ஒரு வழியாக, பாலமுருகன் பிடித்து, சிறை அலுவலர் தாமரைச்செல்வனிடம் ஒப்படைத்தார்.சிறை அலுவலர் தாமரைச்செல்வன் கொடுத்த புகாரின் படி, பாகாயம் போலீசார், அந்தோணி மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img