குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியுடன் கீதா சந்திப்பு

இந்தியாவில் இருந்து தவறுதலாக பாகிஸ்தான் சென்ற வாய் காது கேளாத பேசமுடியாத, பெண் கீதா 15 வருடங்களுக்கு பிறகு இந்தியா திரும்பியுள்ளார்.

நேற்று முன்தினம் இந்தியா திரும்பிய கீதாவை வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் வரவேற்றார். பிரதமர் மோடி கீதாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்ததுடன், இத்தனை ஆண்டுகள் அவரை பாகிஸ்தானில் கவனித்து வந்த தொண்டு நிறுவனத்துக்கு நன்றி தெரிவித்து, ரூ.1 கோடி நன்கொடை வழங்குவதாக அறிவித்தார். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கீதாவை ஜனாதிபதி மாளிகைக்கு வரவழைத்து சந்தித்தார்.

அவர் கீதாவுக்கு வாழ்த்து தெரிவித்தார். டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் தனது முகாம் அலுவலகத்தில் கீதாவை சந்தித்தார். மொழிபெயர்ப்பாளர் உதவியுடன் கெஜ்ரிவால் கீதாவிடம் சிறிது நேரம் பேசினார். கீதா இந்தியா திரும்பிய அதேவேளையில், 15 வயதான பாகிஸ்தான் சிறுவன் ரம்ஜான் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது. எதிர்பாராதவிதமாக இந்த இரு சம்பவங்களும் ஒரே நேரத்தில் நடந்துள்ளன.

இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் அன்றாடம் குண்டு மழை பெய்துவரும் வேளையில் இந்த மனிதாபிமான செயல்களும் அரங்கேறியுள்ளன. கீதா பாகிஸ்தானில் இருந்தபோது இந்திய தூதரகம் அனுப்பிய போட்டாக்களை பார்த்து, பீகாரை சேர்ந்த ஜனார்தன் மஹாதோ தான் தனது தந்தை என்றும், வளர்ப்பு தாய் மற்றும் சகோதரர்களையும் அடையாளம் காட்டியிருந்தார். ஆனால் டெல்லி விமான நிலையத்தில் வரவேற்க வந்த அவர்களை கீதா அடையாளம் காட்டவும், ஏற்கவும் மறுத்துவிட்டார். இதனால் கீதா மற்றும் அவரது தந்தை என கூறப்படும் ஜனார்தன் மஹாதோவுக்கும் டி.என்.ஏ. பரிசோதனை நடைபெறுகிறது.

டி.என்.ஏ. சோதனை மூலம் கீதா சரியான பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுவார் என்று மத்திய அரசு கூறியுள்ளது. கீதாவை உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒரு தம்பதியும் தங்கள் மகள் என்று உரிமை கோரியுள்ளது. பிரதாப்கார் மாவட்டம் ராம்பூர் கிராமத்தை சேர்ந்த ராம்ராஜ்-அனரா தேவி தம்பதியினர் கீதா எங்கள் மகள் என்று கூறியுள்ளனர்.

இதற்கான போட்டோக்கள், வேறு சில ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன. நாங்கள் டி.என்.ஏ. சோதனைக்கும் தயாராக இருக்கிறோம் என்று அனரா தேவி கூறினார். எங்கள் மகள் சவீதா தான் கீதா. 12 வருடங்களுக்கு முன்னர் அவர் பீகார் நானக் ஷா மடத்தில் இருந்து காணாமல்போனார் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இதுதொடர்பாக அலகாபாத்தில் உயர் அதிகாரிகளையும் அந்த தம்பதியினர் சந்தித்து விளக்கினார்கள். கீதாவை சந்திப்பதற்காக அவர்கள் டெல்லி புறப்பட்டு சென்றனர்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

Topics

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories