பாட்னா:
பிகார் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான 3ஆம் கட்ட வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கியது.
50 தொகுதிகளில் நடைபெறும் 3ஆம் கட்டத் தேர்தலில் லாலு பிரசாத் யாதவின் மகன்களான தேஜ், தேஜஸ்வி உள்ளிட்ட 808 பேர் போட்டியிடுகின்றனர். அவர்களில், 71 பேர் பெண்கள். தேர்தலில் சுமார் 1.45 கோடி பேர் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்யவுள்ளனர்.
இந்த வாக்குப் பதிவை ஒட்டி, 14,170 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 6,747 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன. 1,909 வாக்குச் சாவடிகள் இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் அமைந்துள்ளன. வாக்குப் பதிவு நடைபெறவுள்ள அனைத்துச் சாவடிகளிலும், மாநில போலீஸாருடன் இணைந்து மத்திய துணை ராணுவப் படையினர் 1,107 படைப்பிரிவினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


