தேவர் நினைவிடம் பசும்பொன்னில் 08–வது தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் சார்பாக நிரந்தர அன்னதான மண்டபம் ரூ.5 கோடி செலவில் கட்டப்படுகிறது.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று 30–ந் தேதி நடைபெறுகிறது.இந்த நிகழ்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மூவேந்தர் முன்னணி கழக நிறுவனர் மருத்துவர் சேதுராமன் அழைப்பிதழ் அனுப்பி உள்ளார்.
இதற்கு முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்த்தி செய்தி அனுப்பி உள்ளதாகவும், 7 அமைச்சர்கள் விழாவில் பங்கேற்க இருப்பதாகவும்மருத்துவர் சேதுராமன் கூறினார்.
தேவர் ஜெயந்தி அன்னதான விழாவில் 50 ஆயிரம் பேருக்கு நெய், பாயாசம், அப்பளத்துடன் அன்னதானம் வழங்கப்படுகிறது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை மூவேந்தர் முன்னணி கழகத்தின் பொதுச் செயலாளர் எஸ்.ஆர்.தேவர், பொருளாளர் செந்தில், இணைப் பொதுச் செயலாளர் இரா.பிரபு, வைகை பத்மநாபன், கழுவன், வி.பி.பாண்டியன், குருசாமி, பகவதி, துரைசிங்கம் மற்றும் செய்தி தொடர்பாளர் மருத்துவ எஸ்.மனோகரன் முன்னின்று செய்து வருகின்றனர். என மருத்துவர் சேதுராமன் வெளிட்யிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


