டாஸ்மாக்குக்கு எதிராக பாடல் : மூடு டாஸ்மாக்கை மூடு பாடலுக்காக பாடகர் கோவன் கைது

 

 தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சமூக பிரச்சினைகளை வலியுறுத்தி வீதி நாடகங்களையும் விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர் மக்கள் கலை இலக்கிய கழகம் என்ற அமைப்பினர்.

 இந்த அமைப்பை சேர்ந்த பொறுப்பாளரும் பாடகருமான கோவன்(51) ‘‘மூடு டாஸ்மாக்கை மூடு’’ என்ற தலைப்பில் டாஸ்மாக் மதுக்கடைக்கு எதிராக பாடல் ஒன்றை எழுதி அதனை ஆடியோ மற்றும் வீடியோவாக தயாரித்து அமைப்பின் பெயரில் வெளியிட்டு இருந்தார் .

‘‘ஊருக்கு ஊரு சாராயம்… தள்ளாடுது தமிழகம்’’ என்று தொடங்கும் பாடல் வீடியோவில் டாஸ்மாக் மதுவுக்கு எதிரான கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன.அ ந்த பாடல் வீடியோ வாட்ஸ்–அப், யூ.டியூப் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வேகமாக வைரலாக பரவி வருகிறது.

இதை தொடர்ந்து 124ஏ (தேச துரோகம்), 153 (2 பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்துதல்), 505(1) (குற்றம் செய்ய தூண்டுதல்) ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் கோவன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து இன்று அதிகாலையில் சென்னை காவல் துறையினர்திருச்சிக்கு விரைந்து சென்றனர்.

திருச்சி உறையூர் அருகே உள்ள மேல பாண்ட மங்கலம் அரவானூரில் கோவனை, அவரது வீட்டில் வைத்து பாடகர் கோவன் கைது செய்தனர். பின்னர் அவர் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளார்

மக்கள் கலை இயக்கிய கழகம் அமைப்பை சேர்ந்தவர்கள் பாடகர் கோவன் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து காவல் ஆணையர் அலுவலகம் முன்பு உதவி ஆணையர் அய்யப்பன், ஆய்வாளர் பிரபு ஆகியோர் தலைமையில் ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். தடுப்பு வேலிகளும் அமைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் இன்று காலை 11 மணியளவில் பாடகர் கோவனை பார்ப்பதற்காக வழக்கறிஞர் ஜிம்ராஜ் மில்டன், அந்த அமைப்பின் நிர்வாகிகளுடன் காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்தார். கோவனை பார்ப்பதற்காக சென்ற அவர் திரும்பி வந்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:–

திருச்சியில் இருந்து சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினரால் பிடித்து வரப்பட்டுள்ள பாடகர் கோவன் எங்கு இருக்கிறான் என்பதை காவல் துறையினர் இதுவரை கூறவில்லை.

இன்று காலையில் காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்தால் அவரை பார்க்கலாம் என்று ஆய்வாளர் மெல்வின் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து அவரை பார்ப்பதற்காக இங்கு வந்தோம். ஆனால் அவரை பார்க்க முடியவில்லை. பாடகர் கோவனை சந்தித்தும் பேச முடியவில்லை. உயர் அதிகாரிகள் யாரையும் சந்திக்க முடியவில்லை.

எனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளோம். அது இன்று விசாரணைக்கு வருகிறது. இந்த விவகாரத்தில் அடுத்த கட்டமாக என்ன செய்வது என்று ஆலோசித்து வருகிறோம் என வழக்கறிஞர் ஜிம்ராஜ் மில்டன் கூறினார்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Entertainment News

Popular Categories