December 6, 2025, 9:07 PM
25.6 C
Chennai

4 ஏக்கர் நிலத்தை சொந்தமாக வாங்கி ஒரு நாட்டை உருவாக்கிய இளைஞர்

 
 
4 ஏக்கர் நிலத்தை வாங்கி தனக்கென தனி நாட்டை அமெரிக்க இளைஞர் உருவாக்கியிருக்கிறார்.இது தொடர்பான செய்தியை உள்ளூர் தொலைக்காட்சி வெளியிட்டது. தொலைக்காட்சியில் இந்த விநோத செய்தி வெளியான பிறகு அமெரிக்கா முழுவதும் கடந்த இரண்டு நாள்களாகப் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தி வருகிறது
 
அமெரிக்காவின் யூட்டா மாகாணத்தின் பெரும் பகுதி பாலைவனம் போன்ற வறண்ட பிரதேசமாகும். அந்த மாகாணத்தின் எல்டர் மாவட்டப் பகுதியில், கடந்த 2005-ஆம் ஆண்டு இணைய வர்த்தகம் வழியாக 4 ஏக்கர் நிலத்தை ஜாக் லாண்ட்ஸ்பர்க் என்ற இளைஞர் வாங்கினார்.
 
நியூயார்க்கைச் சேர்ந்த அவர் அடிப்படையில் ஒரு சிற்பி. நிலம் வாங்கியபோது அவருடைய வயது 20. தற்கால அரசியல், சமூக சூழல் மீது மிகுந்த அவநம்பிக்கை ஏற்பட்ட நிலையில், தனது நிலத்தில் சொந்தமாக ஒரு நாட்டை உருவாக்க அவர் திட்டமிட்டார்.
 
நிலத்தைச் சுற்றிஎல்லைப்புற வேலியை முதலில் அமைத்த அவர், கண்காணிப்பு கோபுரம், எல்லைப் பாதுகாப்புக்கு இயந்திர மனிதன் என ஒவ்வொன்றாக அமைத்தார்.
 
அவருடைய பெயரைக் கொண்டே “ஜாகிஸ்தான் குடியரசு’ என்று தனது நாட்டுக்குப் பெயரிட்டார். அந்நாட்டுக்கு அவர்தான் அதிபர். அதற்கென தேசியக் கொடி, பாஸ்போர்ட் உண்டு. தலைநகர் ஜாக்கோபோலிஸ்.
 
ஆனால் அதன் வளங்கள் சற்றுக் குறைவுதான். இந்த நாட்டை அடைய ஒழுங்கான சாலை கூட கிடையாது. சாலையிலிருந்து விலகி, மணல் வெளியில் 24 கி.மீ. பயணம் செய்தால் ஜாகிஸ்தான் குடியரசின் எல்லையை அடையலாம். பெட்ரோல் வேண்டுமானால் 80 கி.மீ. செல்ல வேண்டும்.
 
அந்த நாட்டில் இதுவரை இவர் உருவாக்கிய கண்காணிப்பு கோபுரம், காவல் இயந்திர மனிதன் ஆகியவற்றை “கலைப் படைப்புகள்’ என்று அவர் கூறி வருகிறார்.
 
“இந்த இடம் ஓர் உண்மையான தேசமாக வேண்டும் என்பதே என் லட்சியம். அது நிறைவேறாது என்று எனக்குத் தெரியும். இங்கு நான் செய்து கொண்டிருக்கும் ஒவ்வொரு சிறு படைப்புகள் மூலம், இதனை ஒரு தனி நாடு என்று எல்லோரும் கருத வேண்டும். அந்த நோக்கத்துடன் எனது முயற்சிகளைச் செய்து வருகிறேன்’ என்று அவர் கூறினார்.
அந்த நிலத்துக்கான பல்வேறு வரிகளை அவர் செலுத்தி வருகிறார். ஆனால் அதை அவர் வரி என்று குறிப்பிடாமல், அண்டை நாட்டுடன் நல்லுறவு காக்க அளித்து வரும் அன்பளிப்பு என்று குறிப்பிடுகிறார்.
அவர் முறையாக வரி செலுத்துவதை உள்ளூர் அரசு அலுவலகம் உறுதி செய்தது.
 
 
ஜாகிஸ்தான் குடியரசு உருவாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, கொண்டாட்டங்களுக்கு அவர் ஏற்பாடு செய்திருந்தார்.
 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories