பெற்றோரின் அலட்சியத்தால் குடிநீர் அண்டாவில் விழுந்த குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு

Published:

பெற்றோரில் அலட்சியத்தால், குடிநீர் அண்டாவில் தவறி விழுந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
 
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள பூந்தோட்டம் பகுதியில் வசித்து வருபவர் ஜானகிராமன் மற்றும் கஸ்தூரி தம்பதியினர். அவர்களது மகன் பாலசுப்பிரமணியன் வயது (1). அவனது பெற்றோர்கள் அந்தக் குழந்தையை கவனக்குறைவாக வீ ட்டில் தனியாக விட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.
 
நேற்று மாலை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனைக் காணவில்லை என்று குழந்தையின் பெற்றோர் அக்கம்பக்கத்திலும், உறவினர் வீடுகளிலும் தேடியுள்ளனர். ஆனால், குழந்தை எங்கும் கிடைக்கவில்லை. இதை அடுத்து, தங்கள் வீட்டுக்குத் திரும்பி வந்து, தேடிப் பார்த்தனர். அப்போது குழந்தை குடிநீர் வைத்திருந்த அண்டாவில் விழுந்து இறந்து கிடந்தது தெரிய வந்துள்ளது.
 
எதிர்பாராத விதமாக குடிநீர் நிரப்பி வைத்திருந்த அண்டாவில் அந்தக் குழந்தை தவறி விழுந்து இறந்ததாக அப்பகுதியினர் கூறினர். சிறுவன் குடிநீர் அண்டாவில் விழுந்து பலியானதற்கு முக்கியக் காரணம் அந்தப் பெற்றோரின் அலட்சியமே என்று கூறப்படுகிறது. இதை அடுத்து, இந்தச் சம்பவம் குறித்து விருத்தாசலம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img