மது குடிக்க பணம் தராததால் மனைவியை கல்லால் தாக்கி கொலை செய்த கொடூர கணவன்

Published:

 
மது குடிக்க பணம் தர மறுத்த மனைவியை கல்லால் தாக்கி கொலை செய்த வெறிச்செயல் சம்பவம் ஆம்பூரில் நடைபெற்றுள்ளது. ஆடு வளர்த்து விற்கும் தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
 
காவல் துறை தரப்பில் நடைபெற்ற சம்பவம் குறித்து கூறப்படுவதாவது:–
 
ஆம்பூர் அருகே உள்ள பொன்னப்பல்லி கிராமத்தை சேர்ந்தவர் மல்லப்பன் (வயது 40). அவரது மனைவி சரிதா (35).
கணவன்–மனைவியும் ஆடு, மாடுகளை வளர்த்தி விற்பனை செய்யும் வேலை பார்த்து வந்தனர். அவர்களுக்கு 6 குழந்தைகள் உள்ளனர். மது குடிப்பழக்கம் மல்லப்பன் குடிப்பதற்கு பணம் கேட்டு அடிக்கடி மனைவியிடம் சண்டை போடுவது வழக்கம்.
 
கடந்த மாதம் 29–ந் தேதி கணவன்– மனைவி இருவரும் ஆடு மேய்க்க சென்றனர். அப்போது மனைவியிடம் மல்லப்பன் மது குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறு செய்தார்.அதனால் அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதனால் ஆத்திரம் அடைந்த மல்லப்பன், தனது மனைவி சரிதாவை கல்லால் தலையில் தாக்கி கொலைஅடித்து உதைத்து கீழே தள்ளினார். அதில் படுகாயம் அடைந்த சரிதா ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை சரிதாவுக்கு அளிக்கபட்டும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார். இதுகுறித்து உமராபாத் காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்து, மல்லப்பனை வலைவீசி தேடி வருகின்றனர்.
ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img