மது குடிக்க பணம் தர மறுத்த மனைவியை கல்லால் தாக்கி கொலை செய்த வெறிச்செயல் சம்பவம் ஆம்பூரில் நடைபெற்றுள்ளது. ஆடு வளர்த்து விற்கும் தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
காவல் துறை தரப்பில் நடைபெற்ற சம்பவம் குறித்து கூறப்படுவதாவது:–
ஆம்பூர் அருகே உள்ள பொன்னப்பல்லி கிராமத்தை சேர்ந்தவர் மல்லப்பன் (வயது 40). அவரது மனைவி சரிதா (35).
கணவன்–மனைவியும் ஆடு, மாடுகளை வளர்த்தி விற்பனை செய்யும் வேலை பார்த்து வந்தனர். அவர்களுக்கு 6 குழந்தைகள் உள்ளனர். மது குடிப்பழக்கம் மல்லப்பன் குடிப்பதற்கு பணம் கேட்டு அடிக்கடி மனைவியிடம் சண்டை போடுவது வழக்கம்.
கடந்த மாதம் 29–ந் தேதி கணவன்– மனைவி இருவரும் ஆடு மேய்க்க சென்றனர். அப்போது மனைவியிடம் மல்லப்பன் மது குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறு செய்தார்.அதனால் அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதனால் ஆத்திரம் அடைந்த மல்லப்பன், தனது மனைவி சரிதாவை கல்லால் தலையில் தாக்கி கொலைஅடித்து உதைத்து கீழே தள்ளினார். அதில் படுகாயம் அடைந்த சரிதா ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை சரிதாவுக்கு அளிக்கபட்டும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார். இதுகுறித்து உமராபாத் காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்து, மல்லப்பனை வலைவீசி தேடி வருகின்றனர்.


