December 5, 2025, 5:21 PM
27.9 C
Chennai

சசிகலா குடும்பம் ராஜ துரோகம் செய்தது என்றார் ஜெயலலிதா: ‘நமது அம்மா’ ஆசிரியர் மருது அழகுராஜ் வாக்குமூலம்!

arumugasamy commission - 2025
சென்னை : ‘சசிகலா குடும்பம் ராஜ துரோகம் செய்தது’ என ஜெயலலிதா கூறியதாக ‘நமது அம்மா’ நாளிதழின் ஆசிரியர் மருது அழகுராஜ், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
நேற்று அதிமுக., செய்தி தொடர்பாளரும் கட்சி நாளிதழின் ஆசிரியருமான மருது அழகுராஜ் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அளித்த வாக்குமூலம்:
சசிகலா உறவினர் ராவணன் தான் என்னை ஜெயலலிதாவிடம் அறிமுகப்படுத்தினார். பின் நமது எம்ஜிஆர்., நாளிதழில் பணியாற்ற ஆரம்பித்தேன். சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை வீட்டை விட்டு வெளியேற்றியபோது என்னையும் பூங்குன்றனையும் ஜெயலலிதா அழைத்தார். அப்போது ‘சசிகலா குடும்பத்தினர் எனக்கு ராஜ துரோகம் செய்துள்ளனர். அவர்கள் வழியாக நீங்கள் வந்துள்ளீர்கள்; நீங்களும் அவர்களுடன் போக நினைத்தால் செல்லலாம்’ என்றார்.
நான் ‘உங்கள் நிழலில் வாழ ஆசைப்படுகிறேன்’ என நான் சொன்னேன். அதன்பின் நமது எம்ஜிஆர்., நாளிதழில் நிர்வாக இயக்குனர் பொறுப்பு கொடுத்தார். ஆனால் அந்த நாளிதழின் வரவு – செலவு கணக்குகளை சசிகலா உறவினர்கள் பார்த்ததால் அவர்களிடம் பகையை வளர்த்துக் கொள்ளக்கூடாது என்பதற்காக ஆசிரியராக மட்டும் பணியாற்றி வந்தேன்.
இதய சிகிச்சைக்காக மருத்துவமனையில் இருந்தபோது கட்சி நாளிதழில் சசிகலா உறவினர் பாஸ்கரனின் சினிமா தொடர்பான செய்தி வெளிவந்தது. அதையடுத்து என்னை அழைத்து ஒரு மணி நேரம் ஜெயாலலிதா திட்டினார்.
கட்சி நாளிதழில் வெளியாகும் தலையங்கங்களில் ஜெயலலிதா அவ்வப்போது சில திருத்தங்கள் செய்வார். மற்ற நாளிதழ்களில் அரசு தொடர்பாக வரும் செய்திகளுக்கு மறுப்பு தெரிவிக்க குறிப்புகளை தருவார். நேரடியாக மறுப்பு தெரிவிக்க முடியாத செய்திகளுக்கு ‘சித்ரகுப்தன்’ என்ற புனைப் பெயரில் மறுப்பு தெரிவிக்குமாறு கூறுவார். கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்ற சசிகலா குடும்பம் நினைத்ததாக செய்தி வெளியானபோது அதற்கு அவர் எந்த மறுப்பையும் தெரிவிக்கவில்லை.
2016 செப். 21ல் அவர் உடல்நிலை மோசமானது; 22ல் அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்தார். அவரது வீட்டில் அவசர தேவைக்கு ஒரு ஆம்புலன்ஸ் கூட நிறுத்தப்படவில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது சர்க்கரை அளவு 500 ஆகவும் இதய துடிப்பு 40க்கு குறைவாகவும் இருந்தது. இதய துடிப்பு ஒரே நாளில் குறைய வாய்ப்பில்லை… என்று கூறியதாக தகவல் வெளியாயின.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories