தேர்வு தோல்வியால் உயிரிழந்த மாணவி பிரதீபா குடும்பத்துக்கு 7 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கி முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இன்று சட்டசபை கூட்டத்தில் பேசிய அவர், தேர்வு தோல்வியால் உயிரிழந்த மாணவி பிரதீபா குடும்பத்துக்கு 7 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படுவதாகவும், மாணவர்கள் யாரும் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது எனவும் வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் அவர் பேசுகையில், தமிழகத்தில் இலவச நாட்டுக்கோழி திட்டம் அமல்படுத்தப்படும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். இலவச ஆடு, மாடுகளை தொடர்ந்து நாட்டுக்கோழி திட்டத்தையும் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் ரூ. 100 கோடி செலவில் மாதவரம் பால்பண்ணை விரிவாக்கம் செய்யப்படும்.
சென்னை திருவெற்றியூரில் 200 கோடி ரூபாய் செலவில் புதிய மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் 110-விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். வேலூரில் .75 கோடி ரூபாய் செலவில் புதிய பால் பண்ணை அமைக்கப்படும். மேலும் தஞ்சாவூரில் ரூ.75 கோடி செலவில் பால்பண்ணை மேம்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பிரதீபா குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குமாறு என்று எதிர்கட்சி தலைவரும், திமுக கட்சியின் செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

