ஓடும் பஸ்சில் 19 வயது இளம் பெண்ணை பஸ்சின் டிரைவர் ரவி (26) மற்றும் கிளீனர் மஞ்சு (23) ஆகியோர் மாறி மாறி கற்பழித்த கொடூர சம்பவம் பெங்களூரின் புறநகர் பகுதியில் நடைபெற்றுள்ளது
பெங்களூர் கே.ஆர்.புரம் அடுத்த ஒசக்கோட்டை என்ற புறநகர் பகுதியை சேர்ந்தவர் 19வயது இளம் பெண்.
அவர் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வருகிறார் . அந்த பெண், நேற்று காலை பணிக்கு செல்வதற்காக பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தார். அப்போது அந்த வழியாக வந்த தனியார் மினி பஸ்ஸை வழிமறித்து ஏறினார். அந்த பஸ்சில் டிரைவர் மற்றும் கிளீனரை தவிர வேறு யாரும் பயணம் செய்யவில்லை.
அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய டிரைவரும், கிளீனரும், ஓடும் பஸ்சிலேயே மாறி மாறி, அந்த இளம் பெண்ணை கற்பழித்துள்ளனர்.
காம கொடூரகளின் நோக்கம் நிறைவேறியபிறகு,
லகொன்டே கிராஸ் பகுதியில் அப்பெண்ணை பஸ்சில் இருந்து இறக்கிவிட்டு, யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டிவிட்டு சென்று விட்டனர்.
பெருத்த வலி காரணமாக தனியார்மருத்துவமனையொன்றில் அந்த பெண் சிகிச்சை பெற்று வருகிறார்.
தகவல் அறிந்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து
டிரைவர் மற்றும் கிளீனர் ஆகியோரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.


