மருமகளின் தலையை வெட்டி பட்டப்பகலில் தெருவில் எடுத்து சென்ற மாமனார் கைது

Published:

தருமபுரி மாவட்டத்தில் மருமகளின் தலையை பட்டப்பகலில் வெட்டி தெருவில் எடுத்து சென்ற மாமனார் கைது செய்யப்பட்டுள்ளார்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள குத்தாலஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. அவரது மகன் ரமேஷ் (28)
ரமேஷின் மனைவி ஆனந்தி(25)

சுப்பிரமணியின் மருமகளாகிய ஆனந்தி அவரது கனவர் மற்றும் மாமியாரிடம் வெகுநாட்களாக அடிக்கடி சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது .

அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்ப்பட்டு வந்த நிலையில் மருமகள் ஆனந்தி மீது ஆத்திரமடைந்த சுப்பிரமணி இன்று பட்டப்பகலில் ஆனந்தியின் தலையை மிக கொடூரமாக வெட்டிக் கொலை செய்துள்ளார்.

கொலை செய்த அவர் மருமகளின் தலையை கையில் எடுத்துக்கொண்டு அவர்கள் வசித்து வரும் தெருவில் ஊர்வலமாக வந்து வீசியுள்ளார் சுப்பிரமணி.

நடைபெற்ற சம்பவம் குறித்து தகவலறிந்த பாலக்கோடு காவல் நிலைய போலீசார் சுப்பிரமணியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர். ஆனந்தியின் உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

மேலும் தலைமறைவாக உள்ள ஆனந்தியின் கனவர் ரமேஷ் உள்ளிட்ட உறவினர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மருமகளின் தலையை மாமனார் வெட்டி பட்டப்பகலில் தெருவில் ஊர்வலமாக எடுத்து சென்ற சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img