முதலமைச்சர் ஜெயலலிதா நீலகிரி மாவட்டம் கோடநாடு பகுதியில் தங்கியிருந்து அரசு பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில் இன்று மாலை சென்னை திரும்பினார்.
கோடநாட்டில் இருந்து பிற்பகல் 1.40 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்ட அவர் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். பின்னர் அங்கிருந்து தனி விமானத்தில் சென்னை புறப்பட்ட அவர் மாலை சுமார் 4 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தார். அங்கிருந்து கார் மூலம் தனது போஸ் இல்லத்துக்கு சென்றடைந்தார்.
முன்னதாக கடந்த மாதம் அக்டோபர் 14 ஆம் தேதி சென்னையில் இருந்து தனி விமானத்தில் கோயம்புத்தூர் சென்ற ஜெயலலிதா, பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கோடநாடு சென்றார்.
சுமார் 3 வார காலம் அங்கிருந்தபடியே, முதலமைச்சர் ஜெயலலிதா அரசுப் பணிகளை கவனித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது


